கண்டிப்பாக அடையாள அட்டை தேவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கண்டிப்பாக அடையாள அட்டை தேவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு கோவை, மார்ச் 21- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவ லர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசு சார்பில் பல்வேறு பணி கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் சோதனை கள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் போலீசார் பாது காப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவ லகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் பணியாளர்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப் பாக ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பணிக்கு வரும் பொழுது அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்ற னர். அடையாள அட்டை இல்லாத பணியாளர்களும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் உடைமைகளை சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே கேட் மீது மோதிய லாரி
ரயில்வே கேட் மீது மோதிய லாரி நாமக்கல்,மார்ச் 21- ஆனங்கூர் ரயில்வே கேட் மீது டிப்பர் லாரி மோதியதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் மாற்று பாதை யில் திருப்பி விடபட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து திருச் செங்கோடு செல்லும் சாலையில்,ஆனங்கூர் என்னும் பகுதி யில் ரயில்வே இருப்பு பாதை உள்ளது. இப்பாதையை தாண்டி தான் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்து கள் சரக்கு வானங்கள் திருச்செங்கோடு செல்ல இயலும். இந்நிலையில் புதனன்று காலை டிப்பர் லாரி ஒன்று ரயில்வே இருப்பு பாதையை கடக்க முயன்ற பொழுது ரயில்வே பாதை கேட்டின் மீது லேசாக மோதி யது. இதனால் சிக்னல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரண மாக கேட் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரயில்வே இருப்பு பாதையை கடக்க முடியாத சூழ்நிலை ஏற் பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் வாகனப் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேருந்துக ளுக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாதை மாற்றி திருப்பி விடப்பட்டன. மேலும் சரக்கு வாகனங்கள் மட்டும் செல்ல இயலாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பின்பு மாலை 5 மணிக்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு வாக னங்கள் வழக்கம் போல இயங்கியது. ஆனங்கூர் பகுதி யில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூறப்பட்டு, பின்னர் அத்திட்டம் அதிமுகவினரே கிடப்பில் போட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஆ.ராசா - திமுகவினர் உற்சாகம்
உதகை,மார்ச் 21- நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாள ராக மீண்டும் ஆ.ராசாவை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி தெரி வித்து திமுகவினர் பட்டாசு வெடித்து கொண் டாடினர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாள ராக ஆ.ராசாவை மீண்டும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், வேட்பாளர் ராசாவிற்கு வாழ்த்து தெரிவித்தும் புதனன்று நெல்லி யாளம் நகர திமுக சார்பில் பந்தலூர் பஜாரில் நகரச் செயலாளர் சேகர் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பி னர் திராவிடமணி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி கணபதி, மாவட்ட அணி களின் அமைப்பாளர்கள் ஜெயசீலன், ஞான சேகர், கூடலூர் சட்டமன்ற தொகுதி ஐடிவிங் அமைப்பாளர் பாலா, நகர ஐடிவிங் அமைப் பாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண் டனர்.
விதொச-வின் தொடர் போராட்டம் வெற்றி
கோவை, மார்ச் 21- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரண மாக ஜமீன் ஊத்துக்குளி, காந்தி நகரில் ரேசன் கடை அமைக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளியில் காந்தி நகரில் ரேசன் கடை இல்லை. எனவே, அப்பகுதியில் ரேசன் கடை அமைத்துத் தர வேண்டும் என அப்ப குதி பொதுமக்கள் மற்றும் அகில இந்திய விவசாய சங்கத்தினர் தொடர் போராட் டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஜமீன் ஊத்துக்குளி காந்தி நகரில் புதிதாக ரேசன் கடை அமைக்கப் பட்டுள்ளது. விதொச கோரிக்கையை ஏற்று ரேசன் கடை அமைத்துக் கொடுத்த தமிழ் நாடு அரசுக்கும், அனைத்து துறையினருக் கும் விதொச நன்றி தெரிவித்துள்ளது.
வெறிச்சோடி காணப்பட்ட மாட்டுச்சந்தை
ஈரோடு, மார்ச் 21- தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ளதால், ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியா ழக்கிழமை மாட்டு சந்தைகள் நடைபெறுவது வழக்கம். இச்சந் தையில் பசுமாடுகள், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுகள் என ஒவ்வொரு வாரமும் 700 -க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும். மாடுகளை வாங்குவதற்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நா டகா, மகாராஷ்டிரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வெளிமாநில வியாபாரிகள் வந்து லட்சக்கணக்கில் மாடுகளை வாங்கி செல்வது வழக்கம். ஒரு வெளி மாநில வியாபாரி குறைந்தது 10 மாடுகள் வாங்கி செல்வார். ரூ 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மாடுகளை வாங்கி செல்வார்கள். இதனால் வார சந்தை அன்று கோடி கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போதும் நாடா ளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலில் இருப்பதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வர வெளி மாநில வியாபாரிகள் அச்சமடைந்துள் ளனர். இதனால், வியாழனன்று நடந்த மாட்டுச்சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால், மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
689 வாக்குச்சாவடி மையங்களுக்கு 825 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
உதகை,மார்ச் 21- நீலகிரி மாவட்டத்திலுள்ள 689 வாக்குச்சா வடி மையங்களுக்கு 825 மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்றமயமாக்கல் பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி கள் முன்னிலையில் வியாழனன்று நடைபெற் றது. எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர் தலை முன்னிட்டு, முதற்கட்டமாக வியாழ னன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்றமயமாக்கல் பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி கள் முன்னிலையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு 825 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 894 விவிபேட் கருவிகளை கணினி மூலம் சீரற்றமயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட சட்ட மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி, குன்னூர் பிராவி டன்ஸ் மகளிர் கல்லூரிக்கு அனுப்பி பாது காப்பாக வைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, நீல கிரி நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகி றது. மேட்டுப்பாளையம் பகுதியில் மொத் தம் 321 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள் ளன. இதற்காக 388 மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் 420 விவி பேட் ஆகி யவை கோவை மாவட்ட தேர்தல் பாதுகாப்பு அறையில் இருந்து, இரண்டு கண்டெய்னர் லாரிகளில் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலு வலர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் மேற்பார் வையில் கண்டெய்னர் லாரிகளில் இருந்து வாக்கு பதிவு இயந்திரங்கள் இறக்கப்பட் டன. பின்னர் அவை கணக்கெடுக்கப்பட்டு கல் லூரியின் பாதுகாப்பு அறையில் அனைத் தும் அடுக்கி வைக்கப்பட்டு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பேனர்:
திருப்பூர், மார்ச் 21- வெள்ளகோவில் அருகில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்ற னர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ள சேனாபதிபாளையம் நியாய விலை கடை அருகில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து பேனர் வைக்கப் பட்டு இருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத் ததுள்ளது. இதையடுத்து பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத்த லம் கட்ட கடந்த 4 வருடங்களாக அனுமதி கேட்டு கிடைக்கவில்லை என்றும் அரசும் அதிகா ரிகளும் கண்டு கொள்ளவில்லை. அதனால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரியவந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுதலம் கட்ட அனுமதி கேட்டு அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பேனர் வைத்ததாக சேனாதிபாளையத்தைச் சேர்ந்த வினோத் குமார் (வயது 27), இசக்கி (27), சிலம்பரசன் (35), சைமன் (35), பிரவீன் (31), மேத்யூ (29) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
பெண் பணியாளர்களுக்கு கழிப்பிட வசதி செய்து தர சிஐடியு கோரிக்கை
திருப்பூர், மார்ச் 21 - ரேசன் கடைகளில் வேலை செய்யும் பெண் பணியாளர்களுக்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் மாவட்டக் கூட்டுறவு பணியாளர் சங்கம் கோரி யுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க நிர்வாகக் குழு கூட்டம் அண்மையில் சிஐடியு மாவட்டக் குழு அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் பி.கௌத மன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு தொடர்ந்து பொய் யான தகவலை தனது சுய விளம்பரத்திற்காக பரப்பி வரும் போலி சமூக ஆர்வலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சட்டரீதியான கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்காமல் உள்ள கூட்டு றவு சங்கங்கள் உடனடியாக பணியாளருக்கு வழங்க வேண்டும். கிடங்குகளில் இருந்து நகர்வு செய்யப்படும் பொருட்கள் சரியான எடையில் நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைப்பதை உறுதிப்படுத்த வேண் டும். தேர்வுநிலை சிறப்பு நிலை வழங்காத பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலை கடையில் அதிக பெண் பணியாளர்கள் பணி யாற்றுகிறார்கள் அவர்களுக்கு கழிப்பிட வசதி உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவவேற்றப் பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே. மகேந்திரன், மாவட்டப் பொருளாளர் பி.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.725 வழங்க சிஐடியு கோரிக்கை
திருப்பூர், மார்ச் 21- திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் ஒப்பந்த ஊழியர்களாக பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதி யம் ரூ.725 வழங்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் கடந்த பல ஆண்டுகளாக தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்) ஒப்பந்த ஊழியர்களாக 25க்கும் மேற்பட் டோர் பணியாற்றி வருகின்றனர். மகப்பேறு மருத்துவப் பிரிவில் பல்வேறு சுகாதார வேலைகளையும் மேற்கண்ட ஊழியர்கள் செய்து வருகின்றனர். தற்போது அவர்க ளுக்கு மாத ஊதியமாக, பிடித்தம் போக ரூ.8. 500 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போ துள்ள விலைவாசி நிலையில் மேற்கண்ட ஊதியத்தில், அவர்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டப் படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் செயல் முறை உத்தரவு ந.க.எண் அ1/1194/2023 நாள்: 29/12/2023-இன் படி ரூ.725 தினசரி ஊதியமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். எனவே என்.எச்.எம் ஊழியர்களுக்கு ரூ.725 தினசரி ஊதியமாக கணக்கிட்டு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி ஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் புத னன்று திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும், திருப்பூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகி யோரிடம் வலியுறுத்தி உள்ளார்.
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.48 லட்சம்
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.48 லட்சம் திருப்பூர், மார்ச் 21- திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப் பட்ட ரூ.48 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கி ழமை பறிமுதல் செய்தனர். திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காங்கயம் சாலை நல்லூரில் கண்காணிப்பு குழு அதிகாரிகள், செவ்வாயன்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்த வில்லியம்ஸ் (40) என்பவரிடம் விசாரணை நடத்திப்னர். இதில், வெள்ளக் கோவிலில் ஒரு நிலத்தை விற்பனை செய்து பணத்தைக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். எனினும் உரிய ஆவ ணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் பவன்குமாா் ஜி.கிரியப்பனவரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் வாகனத் தணிக்கையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல்
திருப்பூரில் வாகனத் தணிக்கையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல் திருப்பூர், மார்ச் 21 – திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி\க்கு உட்பட்ட சிறு பூலுவபட்டி பகுதியில் தேர்தல் நிலைக் கண்காணிப்புக்குழு வினர் மேற்கொண்ட சோதனையில், முறையான ஆவணங் கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். புதன்கிழமை தேர்தல் நிலைக்கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்த த.ஞானசேகர் என்பவர் வாகனத் தணிக்கையில் ஈடுபட் டார். அப்போது, கோபிச்செட்டிபாளையம் அத்தானியைச் சேர்ந்த சு.பாலன் (வயது 35) என்பவர் வாகனத்தில் ரூ.60 ஆயி ரம் பணத்தைக் கொண்டு வந்தார். அவரிடம் முறையான ஆவ ணங்கள் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினர் உதவித்தேர்தல் நடத்தும் அலுவல ரான சார் ஆட்சியரிடம் ஒப்படைத்து சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்து ரசீது பெறப்பட்டது.
ஒன்றிய மோடி அரசின் தமிழக விரோத போக்கு திமுகவினர் தீவிர திண்னைப் பிரச்சாரம்
ஒன்றிய மோடி அரசின் தமிழக விரோத போக்கை அம்பலப்படுத்தி, இந்தியா கூட்டணி வெற்றிக்காக திமுகவினர் தீவிர திண்னைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நிலை யில், ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். நாமக்கல்லில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் பள்ளி பாளையம், குமாரபாளையம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே திமுகவினர் பொதுமக்களை வீடு வீடாக சந்தித்து மாநில அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித் தும், ஒன்றிய பாஜக அரசு உரிய நிதியை வழங்காதது, மாநில உரிமைகளை தொடர்ந்து பறிப்பது குறித்து பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். மேலும், திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கேட்டு, துண்டு பிரசு ரங்களை வழங்கி பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றனர். இதில் பள்ளிபா ளையம் ஒன்றியப் பகுதி மற்றும் நகரப் பகு திகளில் உள்ள திமுகவினர் பல்வேறு குழுக் களாக பிரிந்து வீடு வீடாக சென்று மக்க ளிடையே இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக சார்பில் போட்டியி டும் வேட்பாளருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என தேர்தல் பரப்புரைகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகின்ற னர். மேலும் கிராமப்புற பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்யும் பணியிலும் திமுக வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ. 77 லட்சம் பணம் பறிமுதல்
ரூ. 77 லட்சம் பணம் பறிமுதல் உதகை,மார்ச் 21- நீலகிரி தொகுதியில் இது வரை ரூ. 77 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. உதகை, குன்னூர், கூட லூர், ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கடந்த 3 நாட்களில் மட் டும் ரூ.49¼ லட்சம் பறிமு தல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் உதகை, குன் னூர், கூடலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவி நாசி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக் கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் கடந்த 3 நாட்களில் ரூ.77¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட் சமாக கேரள மாநில எல்லை யோரம் உள்ள கூடலூர் சட்டமன்ற தொகுதியில் மட் டுமே இதுவரை ரூ.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. எனவே ஆவணங் கள் இல்லாமல் ரூ. 50 ஆயி ரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும், முக்கிய தேவை யாக இருந்தால் அதற்குரிய ஆவணங்களை சரியாக கொண்டு வர வேண்டும் என்றும் தேர்தல் பிரிவு அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.