கோவை, நவ.24- கோவை அசோகபுரத்தில் பள்ளி மாண விக்கு, உணவு முறை குறித்து பேசி மன உளைச்சல் ஏற்படுத்திய விவகாரம் தொடர் பாக மாவட்ட சிறுபான்மை நலத்துறை, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வட் டாட்சியர் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்திட, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார் கோவை மாவட்டம், துடியலூர் அசோக புரம் அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு படிக் கும் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர், உணவு ரீதியாக பேசி மன உளைச்சல் ஏற்படுத் தினர். இதற்கு, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப் பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, கோவை முதன்மை கல்வி அலு வலர் பாலமுரளி பள்ளியில் புதன்கிழமை யன்று நேரடியாக விசாரணை மேற்கொண்டு, அதுதொடர்பான அறிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தார். இதனையடுத்து, மாவட்ட சிறுபான்மை நல அலுவலர், குழந்தைகள் நல அலுவ லர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்திட மாவட்ட ஆட் சியர் கிராந்திகுமார் உத்திரவிட்டார். இதனிடையே, சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரி வித்துள்ளது.