districts

img

பிறப்புச் சான்றிதழ் பெற வரும் பெற்றோருக்கு மரக்கன்று வழங்கல்

கோவை, ஆக.18- சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பிறப் புச் சான்றிதழ் பெற வரும் பெற்றோர்களுக்கு சுற்றுப்புறத்தை பேணிக்காக்கும் நோக்கில் மரக்கன்றுகளை கொடுக்கும் பெண் பேரூ ராட்சித் தலைவரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற் குட்பட்டு சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சியின் தலைவராக உள்ள தேவி மன்னவன், சமூக நலத்திட்டங்களை பேரூராட்சியில் அறிமுகப் படுத்தி வருகிறார். குளங்களை சுற்றிலும் மரங் களை நடுவது, கழிப்பிட சுவர்களில் தூய் மையை பேணும் வகையில் ஓவியங்கள் வரைவது ஆகியவற்றை செயல்படுத்தி வரு கிறார். இதன்ஒருபகுதியாக மரங்களை வளர்ப்பதின் அவசியத்தையும், சுற்றுப்புறத் தில் மரங்களை வைத்து தூய்மையான காற்றை பெறுவதற்காகவும், பேரூராட்சியில் பிறப்புச் சான்றிதழ் பெற வரும் பெற்றோர் களுக்கு பிறப்புச் சான்றிதலுடன், ஒரு மரக்கன் றையும் கொடுத்து வருகிறார். இந்த மரக்கன் றுகளை வாங்கிச் செல்லும் பெற்றோர்கள் தாங்கள் வீட்டில் வைத்து வளர்க்க முடிய வில்லை என்றாலும், அதற்காக பசுமை வனம் ஒன்றையும் ஏற்படுத்தி இருக்கிறார். அதில் மரங்களை வைத்து அவர்களாகவே தண்ணீர் ஊற்றி, “குழந்தை வளர வளர அந்த மரமும்  வளரும்” என்ற நோக்கில் இந்த முயற்சியை  முன்னெடுத்து இருக்கிறார். இப்பகுதி மக்களி டம் வரவேற்பை பெற்றுள்ளது.