districts

மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்திடுக

சிபிஎம் வலியுறுத்தல் தருமபுரி, ஜூலை 9- குடிநீர் பிரச்சனையை தீர்க்க தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒகே னக்கல் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிபிஎம் தருமபுரி மாவட்டச் செய லாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக் கையில், மூன்று குற்றவியல் சட்டங் களையும் எதிர்த்து ஜூலை 12 முதல் 15 ஆம் தேதி வரை, மாவட்டம் முழுவதும் 100 மையங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத் தப்படும். மனிதவள மேம்பாட்டில் மாவட்டத்தின் கடைக்கோடி மாவட் டங்களில் ஒன்றாக தருமபுரி உள் ளது. மாவட்டத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சிட்கோ தொழிற்பேட்டை, சேகோ சர்வ், தக் காளி பதப்படுத்துதல் உள்ளிட்ட வேளாண் சார்பு தொழிற்சாலை கள், தோட்டக்கலை மேம்பாடு, தடுப்பணைகள், நீர்பாசன வசதி, சாலை, குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத் தப்படும் என தேர்தல் வாக்குறுதி களாக திமுக அரசு அளித்தது. இந்நி லையில், வரும் ஜூலை 11 ஆம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு தருமபு ரிக்கு வருகை புரியும் தமிழ்நாடு முதல்வர், தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்ற உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில தினங்களாக மாவட் டத்தின் பல இடங்களில் பொதுமக் கள் குடிநீருக்காக காலிக்குடங் களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் பிரச்ச னைக்கு உடனடியாகத் தீர்வு காண, மாவட்டம் முழுவதும் அனைத்துக் குடியிருப்பு பகுதிகளிலும் ஒகே னக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமல்படுத்தி, தினசரி குடிநீர் விநி யோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். சமீபத்தில் நடந்து முடிந்த 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை விளக்கி ஜூலை 24ஆம் தேதியன்று தருமபுரியில் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர் கள் சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.