நாமக்கல், ஏப்.20- நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில், விவ சாய கூலி ஒருவருக்கு பட்டா வழங்ககாமல் அலைக் கழிப்பு செய்ததால் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டதையடுத்து, அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர். எலச்சிபாளையம் ஒன் றியம், கோக்கலை கிராமம் கருமகவுண்டம்பாளையத்தில் வசிப்பவர் மாதேஸ்வரி. இவரது கணவர் சீரங்கன். விவ சாயக் கூலி வேலை செய்து வரும் இவர், பட்டா கேட்டு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மனு கொடுத்திருந்தார். விசாரணை முடிவடைந்தும், வட்டாட்சியர் அலுவல கத்தில் இன்று, நாளை என அலைக்கழித்து வந்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர் களுடன் கோக்கலை கவுன்சிலர் சு.சுரேஷ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடா சலம், ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் உள் ளிட்டோர் எலச்சிபாளையம் வருவாய்த் துறை அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, துணை வட்டாட்சியர் சவுண் டேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத் தினர். பின்னர், உடனடியாக பட்டா பெற்று தருவதற்காக நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.