districts

img

சாலையோரம் வசித்தோருக்கு வீடு ஒதுக்குவதில் கெடுபிடி

திருப்பூர், டிச.13– சாலையோரம் வசித்தோருக்கு வீடு ஒதுக்குவதில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கெடுபிடி செய் வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலையிடக்கோரி பாதிக்கப்பட்டோர் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கஜலட்சுமி திரையரங்கம் அருகே நொய்யல் ஆற்றங்கரையோரம் ஏரா ளமான குடும்பத்தினர் பினாயில் மறு றும் துடைப்பம் உள்ளிட்டவை வியாபா ரம் செய்து அங்கேயே தங்கி வருகின்ற னர். இவர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலிபாளையம் பகுதியில் வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவ்விடத்தில் ஏற்கனவே பல ருக்கு பட்டா வழங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வா கம் சார்பில் 2019ஆம் ஆண்டு குடிசை  மாற்று வாரிய குடியிருப்பில் இவர்க ளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக 10 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகையாக ஏற்கனவே இவர்கள் செலுத்தியுள்ளனர். தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என் றால், ஒரே தவணையில் 1 லட்சத்து 900 ரூபாய் கட்ட வேண்டும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். இதை முன்கூட்டியே தெரி வித்திருந்தால் சிறிது சிறிதாக செலுத்தி இருப்போம். தற்போது கூட வீடு ஒதுக் கீடு செய்த உடன் மாத தவணையை செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் குடிசை மாற்று வாரிய அதி காரிகள் ஒரே தவணையாக செலுத்த வற்புறுத்துவதாக அவர்கள் புகார் கூறி னர். எனவே மாவட்ட நிர்வாகம் இப் பிரச்சனையில் தலையிட்டு தங்க ளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்தனர்.