கோவை, டிச.6- ”மிக்ஜம்” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லாரி மூலம் நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக் கப்பட்டது. சென்னையில் ”மிக்ஜம்” புயல் காரணமாக கனமழை பெய்ததில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு உதவிகளை செய்து வரு கிறது. மேலும், பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண உதவிகளை ஆங்காங்கே அனுப்பி வரு கின்றனர். கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தன்னார்வலர்கள் உத வியுடன் அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள், நாப்கின் உட்பட அத்தியாவசியமான பொருட்கள், அந்தந்த தாலுகாவில் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து நிவார ணப்பொருட்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு அனுப்பி வைத்தார். நாமக்கல் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சேகரிக்கப்பட்ட அரிசி, கோதுமை மாவு, ரவை, உணவு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அத்தி யாவசிய பொருட்கள், முதல் கட்டமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் கொண்ட லாரி களை தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கொடி அசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார். அவருடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, தமிழ்நாடு கோழி பண்ணை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கே.சிங்கராஜ், உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோன்று, குமாரபாளையத்திலிருந்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்களும், திருச்செங்கோடு பகுதியில் இருந்து சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு, ஈரோடு மாவட்டத்திலிருந்து அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப் பப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) வே.லதா, ஒளி ரும் பவுண்டேசன் தலைவர் சின்னசாமி உட்பட பலர் உடனி ருந்தனர்.