பள்ளிபாளையம், மார்ச் 17- சமூக விரோதிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகள் குறித்து, அரசு பள்ளி மாணவிகளிடம் காவல் உதவி ஆய்வாளர் கலந்துரையாடல் நடத்தினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, பள்ளி பாளையம் அடுத்துள்ள சௌதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இம்மாணவிகளை, அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுப்பதாகவும், வகுப்பு நேரங்களில் வெளியே நின்று கொண்டு ஒரு சில இளை ஞர்கள், கத்தி கூச்சலிட்டு அச்சப்படுத்துவதாகவும், மாணவி களின் பெற்றோர் பள்ளியில் புகார் தெரிவித்தனர். இது குறித்து, ஊராட்சி மன்ற தலைவர் வெப்படை காவல் நிலை யத்தில் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, அரசு பள்ளியில் பயிலும் மாணவி களிடம், வெப்படை காவல்நிலைய இளம் ஆய்வாளர் மலர் விழி கலந்துரையாடினார். இதில், வகுப்பறையிலும், படிப்ப தற்கு இடையூறாக யார் இருந்தாலும், அவர்களை கண்டு பயம் கொள்ளக்கூடாது என்றும், இதுபோன்ற நேரங் களில், காவல்துறையின் இலவச எண்ணான 100க்கும், என்னுடைய தனிப்பட்ட செல்போன் எனக்கு தொடர்பு கொள்ளலாம் என கூறி மாணவிகளிடம் நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தினார்.