districts

img

விவசாயிகளுக்கு மானியங்கள் தருவதில் பாரபட்சம்

உடுமலை, பிப்.19- உடுமலை பகுதியில் விவசாயி களுக்கு அரசு மானியங்கள் தருவ தில் பாரபட்சமாக வேளாண் அதி காரிகள் செயல்படுவதாக விவ சாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.  உடுமலை மற்றும் மடத்துக் குளம் பகுதியில் கடந்த மாதம்  வரை பரவாலாக நல்ல மழை பெய் ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந் துள்ளது. மேலும்  அமராவதி மற்றும்  திருமூர்த்தி அணைகளில் நீர் இருப்பு கணிசமாக உள்ளது. இத னால்  தக்காளி, வெங்காயம் மற்றும்  சோளம் ஆகியவற்றை விவசாயி கள் பயிர் செய்து உள்ளனர்.  மேலும், மழையை எதிர்பார்த் துள்ள மற்றும் சிறு தானிய வகை களை பயிர் செய்துள்ளனர். உடுமலை பகுதியில் ஏற்கனவே  விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்கு கட்டுப டியான விலை கிடைப்பது இல்லை.  இந்நிலையில் வியாபாரிகளும், தனியார் கமிசன் மண்டி உரிமை யாளர்களும் சேர்ந்து கொண்டு செயற்கையாக குறைந்த விலை யை நிர்ணயம் செய்வதால் கட்டு படியான விலை என்பது கிடைப்பது  இல்லை. இந்நிலையில், தனியார் நிறுவ னங்களின் விதைகளால்  சரியான விளைச்சல் இல்லாமல் நட்டம் ஏற் பட்ட நிலையில்,  மீண்டும்  தனியார்  விதை  நிறுவனங்களின் விற்பனை  பிரதிநிதிகள் விவசாயிகளிடம் சென்று, தங்களின் விதை, மருந்து களை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கின்றனர். இதனால் விவ சாயிகள் ஏமாற்றமடைய அதிக  வாய்ப்புள்ளது. இதனை வேளாண் மைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.  மேலும், அரசு  திட்டங்கள் மற்றும் பல்வேறு மானி யங்கள் சில பகுதிகளில் வசதி படைத்த விவசாயிகள் மட்டும் பெறு வதாக தொடர் குற்றசாட்டு உள்ளது.  

இதனால் அரசு திட்டம் பற்றி  எதுவும் அறியாத ஏழை விசாயிகள்,  தனியார் நிறுவனங்களின் ஆசை  வார்த்தைக்கு இரையாக நேரிடு கிறது.  இதுகுறித்து விவசாயிகள் தெரி விக்கையில்,  உடுமலை மற்றும்  மடத்துகுளம் பகுதியில் வேளாண்  துறை  ஒன்று உள்ளதா என தெரிய வில்லை. கடந்த பருவத்தில் விதைத்து பெரும் ஏமாற்றம் அடைந்த விதைகளே தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்த விதைகளால்தான் விளைச்சல்  இல்லாமல் போனது. ஆனால் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால்,    விளைநிலம் சரியில்லை, முறை யாக பரமரிப்பு இல்லை என எங்கள்  மீது பழி போடுகிறார்கள். இந்நிலையில், வேளாண்துறை  செயல் படுத்தும் அனைத்து திட்டங் களும் விவசாயிகளுக்கு தெரிய படுத்த வேண்டும். மண் பரிசோ தனை செய்ய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். விளைநிலங்களில் காலநிலைக்கு ஏற்ப பயிர் மற்றும்  உரம் ஆகியவற்றை அரசே  வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். விளைப் பொருட் களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கும் வகையில்,   இடைதரகர் கள் இல்லாமல் விற்பனை செய்ய  வேண்டும். குறிப்பாக, அரசு மானி யங்கள் எந்த விவசாயிகளுக்கு தரப் பட்டது என்பதை வெளிப்படை யாக தெரிவிக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.