உடுமலை, ஆக. 6- கரை வழி நாட்டின் கல்வெட்டு கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்கிரம சோழன் குறித்தும், போரின் சேதம் குறித்தும் இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் தெரியப்படுத்தியுள்ளதாக, தொல் லியல் துறையினர் தெரிவித்துள் ளனர். கரை வழி நாட்டுக் கல்லாபுரத் திற்கு முந்தைய பெயர் விக்கிரம சோழ நல்லூர். இதை உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின் றனர். கல்லாபுரம் பெருமாள்புதூ ருக்கும் இடையில் உள்ள பொன்னி காட்டுத் துறைக்கு செல்லும் வழி யில் உள்ளது கொம்மே கவுண்டன் துறை எனும் குமணன் துறை. இந்த குமணன் துறையே வழக்காற்றுச் சொல்லில் கொமணான் துறை என மருவிவிட்டது. இந்த குமணன் துறைக்கு அருகில் உள்ள ராசவாய்க்காலில் உள்ள எட்டு அடி நீளமும். இரண்டு அடி அகலமும் படுக்கை நிலையில் உள்ள கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரம சோழ தெவற்கு என்று தொடங்கி, இருபத்தி இரண்டு வரிகளில் கரை வழி நாடு எனவும், விக்கிர சோழ தெவற்கு எழுதிய எழுத்து எனவும் முடிகிறது. இதில், பல எழுத்துக்கள் சிதை வடைந்திருந்தாலும், நில தானத் தையும், விக்கிரம சோழனின் பெய ரும், ஆண்டும் தெளிவாக தெரிவிக் கிறது. இந்த கல்வெட்டில் விக்கிரம சோழன் என்பது 12 ஆம் நூற்றாண் டில் ஆட்சி செய்த விக்கிரம சோழ னைக் குறிப்பதாகவும், கல்லா புரத்தின் முந்தைய பெயரான விக்கிரம சோழ நல்லூர் என்பதை அடையாளப்படுத்துவதுமாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் கள் கூறுகின்றனர்.
இக்கல்வெட்டு போரின் சேதத் தைக் குறிப்பிடுவதாகவும், அதற்கு நிவர்த்தி செய்வதற்கு கரைவழி நாட்டின் ஊரின் பெயர்களையும், திருக்கோயிலுக்கு விடப்பட்ட நில தானங்களிலிருந்து வரும் வரியி னங்கள் சார்ந்த வருவாய்களையும் குடிமக்கள் குறித்து கூறுகிறது. கண்டராதித்த செட்டி, கண்டிய தேவன், நெல் தானம் செய்தது குறித்தும், நிலங்களின் இருப்பிடம் குறித்தும் அதன் சுற்றப்புற எல்லை கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. வீரசோழநல்லூர், கல்லாபுரம் பகுதியில் கந்தன், அடியன், வள வினன் எனும் உடையானுக்கு நில தானம் செய்தது குறித்தும், அந்த நிலத்தை அடையாளப்படுத்தும் வகையில் சுற்றுப்புற நிலங்களின் பெயர்கள் குறித்தும் பட்டியலி டப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. கரை வழிநாடு குறித்தும் கரை வழி நாட்டின் கல்வெட்டுகள், பாரம் பரியம், விவசாயம் குறித்தும் தொடர்ந்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரின் களப்பணி வாயிலாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில், உடுமலை ஜிவிஜி பெண் கள் கல்லூரி வரலாற்றுத் துறை இரண்டாமாண்டு மாணவி ச.க. அறிவரசி, இந்தக் கல்வெட்டினை உடுமலை வரலாற்று ஆய்வு நடு வத்தின் சார்பில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி உள்ளார்.