districts

img

ரூ.14.47 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கல்

சேலம், பிப்.15- சேலத்தில் வியாழனன்று நடை பெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங் கும் முகாமில், 394 மாணவ, மாணவி களுக்கு ரூ.14.47 மதிப்பில் கடனு தவி வழங்கப்பட்டது. சேலம் தொங்கு பூங்காவில் அமைந்துள்ள மாநகராட்சி பல் நோக்கு அரங்கில், வியாழனன்று கல் விக்கடன் வழங்கும் முகாம் நடை பெற்றது. சேலம் மாவட்டத்தில் கடந் தாண்டு வரை 2200 மாணவ மாணவி களுக்கு ரூ.70 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழனன்று நடை பெற்ற கல்விக்கடன் வழங்கும் முகா மில், மாவட்டத்திலுள்ள 44 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் மூல மாக 394 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.47 கோடி மதிப்பில் கல்விக்கடன் கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சி யர் ரா.பிருந்தாதேவி, உயர்கல்வி பெரும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன்களை வழங்கினார்.  இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், வியாழனன்று (நேற்று) மாலை வரை மேளா தொட ரும். மேலும், 200 மாணவ, மாணவி களுக்கு கல்விக்கடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார். மேலும், குரங்கு காய்ச்சலை கட்டுப் படுத்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம் மாவட்ட எல்லைகளில் கண்காணிக் கப்பட்டு சோதனை செய்து வருகின் றனர். கோடை காலம் துவங்க உள்ள நிலையில், தீப்பற்றும் பொருட்களை ஏற்காடு உள்ளிட்ட வனப்பகுதிக ளுக்கு எடுத்து செல்லாதவாறு சோத னைச்சாவடிகள் அமைத்து கண்கா ணிக்கப்படும். வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வைப்பதற்கு  வனத்துறை மூலம் அறிவுறுத்தப்பட் டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், கூடுதல்  ஆட்சியர் அலர்மேல் மங்கை, வரு வாய் அலுவலர் மேனகா, தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், வங்கி மேலாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.