districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கொடியேற்றுதல் விழா

நாமக்கல், டிச.3- உலக மாற்றுத் திறனாளி கள் தினத்தை முன்னிட்டு கொடியேற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா  நடைபெற்றது. உலக மாற்றுத்திறனா ளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் சார்பில், கொடியேற்றுதல் மற்றும்  சங்கப்பெயர் பலகை திறப்பு விழா நாமக் கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டார பகுதி முழுவதும் நடைபெற்றது. ஆவரங் காடு, ஓடப்பள்ளி அக்ரஹாரம் கிளை, காவிரி  ஆர்.எஸ்.கிளை, வெடியரசம்பாளையம் கிளை உள்ளிட்ட பள்ளிபாளையம் ஒன்றிய  பகுதியின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில், பள்ளிபாளையம் தாலுகாத் தலை வர் அர்ஜுனன், தாலுகாச் செயலாளர் அருண் குமார், தாலுகாப் பொருளாளர் கனகவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கொடியினை ஏற்றி மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் சிறப்புரையாற்றினார். மேலும், தாலுகா துணைச் செயலாளர் சரவ ணன், ஓடப்பள்ளி கிளைத் தலைவர் சுப்பிர மணி, மதிமுக நகரச் செயலாளர் ரமேஷ்  மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.