districts

img

சிலிண்டர் இருந்தால் உதவித்தொகை மறுப்பதா? மாற்றுத்திறனாளிகள் மாநாடு எதிர்ப்பு

திருப்பூர், ஜூலை 11 – சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்திருந்தால் உதவித் தொகை தர முடியாது, சிலிண்டரை ஒப்படைத்தால்தான் உதவித்தொகை கொடுக்க முடியும் என அரசு நிர்பந்தம் செய் வதற்கு மாற்றுத்திறனாளிகள் மாநாடு கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தெற்கு தாலுகா மூன்றாவது மாநாடு கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயி றன்று நடைபெற்றது. ஏ.ஷகிலா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.ஜெயபால் தொடக்கி வைத்தார். இடு வாய் ஊராட்சி தலைவர் க.கணேசன், போக்குவரத்து தொழி லாளர் சங்க செயலாளர் பெ.செல்லதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் நிறை வுரை ஆற்றினார். புதிய நிர்வாகிகள் தெற்கு மாநகரத் தலைவர் கோ.பொம்முதுரை, செயலா ளர் நா.சஞ்சீவன், பொருளாளர் சுந்தரவடிவேல், துணைத்  தலைவர் ஏ.ஷகிலா, துணைச் செயலாளர் எம்.லோகநாதன்  உள்ளிட்டு 13 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.  தெற்கு ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர்  சுப்பிரமணி, பொருளாளர் ஜெ.செல்வி, துணைத் தலைவர்  வெங்கடேஸ்வரி, துணைச் செயலாளர் மரியதாஸ் உள்ளிட்ட  11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. சமையல் கேஸ் உள்ள மாற்றுத்திறனாளிக்கு உதவித் தொகை மறுப்பதையும், சிலிண்டரை சரண்டர் செய்தால்தான்  உதவித்தொகை என்பதை  தமிழக அரசு கைவிட வேண்டும்  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.