districts

img

ஆறு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம்

கோபி, ஜன.1- கோபிச்செட்டிபாளையம், கீழ்பாவனி பாசன பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) முதல் ஆறு இடங்களில் நேரடி  நெல்கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டு செயல்ப டும் என தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழகம் தெரிவித் துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை யிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து கீழ்பவானி பாசன பகுதி யில் உள்ள விவசாயிகள் நெல் சாகுப டியை தொடங்கி, தற்போது நெற்பயிர் அறு வடைக்கு தயாராகி உள்ளது. இந்நிலை யில், அறுவடைக்கு தயாரான நெல்லை கொள்முதல் செய்ய, அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா விற்கு, கீழ்பவானி பாசன சங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்நிலையில், விவசாயிகளின் கோரிக் கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கோபி வட் டாரத்தில் முதற்கட்டமாக நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் அமைக்க உத்தர விட்டது. அதன் அடிப்படையில், செவ்வாய் கிழமை முதல் கோபி, கலிங்கியம், அளுக் குளி, கூகலூர், நாதிபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் என ஆறு இடங்க ளில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.