சேலம், ஜூலை 18- வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது கொலைவெறி தாக்குத லில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் தப் பிக்கும் வகையில், போலீசார் ஆள்மாறாட் டம் செய்து கைது செய்வதாக குற்றம்சாட்டி சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட் டரி சீட்டு மற்றும் ரேசன் அரிசி கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடு படுபவர்களை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, சேலத்தில் நடைபெற்ற இயக்கங்களில் முன் னின்றவர் வாலிபர் சங்க சேலம் மாவட்ட செய லாளர் பெரியசாமி. இந்நிலையில், சேலம் மாநகராட்சியின் 55 ஆவது திமுக மாமன்ற உறுப்பினர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் என்பவர் இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவதாக குற்றச் சாட்டு உள்ளது. இதனை கண்டித்து, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டங் களை நடத்தி வந்தனர். இந்நிலையில் வாலி பர் சங்கம் மாவட்ட செயலாளர் பெரிய சாமியை சதீஷ் உள்ளிட்ட சமூகவிரோதிகள் இரும்புத்தடி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்க ளோடு கடந்த 13ஆம் தேதி கொலை செய்யும் திட்டத்தோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவத்தை கண்டித்தும், உண்மை குற்ற வாளிகளை கைது செய்யக்கோரியும், சேலம் மாவட்டத்திலும், தமிழகம் முழுவதும் வாலி பர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங் களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சமூகவிரோத செயல்க ளில் ஈடுபட்டு வரை கைது செய்யாத போலீ சார், பெரியசாமி மற்றும் வாலிபர் சங்கத்தினர் சிலர் மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ள னர். மேலும், தாக்குதல் நடத்திய சமூக விரோ திகளை விட்டுவிட்டு சதீஷ் என்பவரிடம் வேலை செய்யும் ஆட்களை கைது செய் துள்ளனர். குற்ற செயலில் ஈடுபட்டோருக்கு பதிலாக ஆள் மாறாட்ட செயல் நடந்துள்ளது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் இல்லாமல் சம்பந்தப்பட்ட உண் மையான சமூகவிரோதிகளை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப் பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். லாட்டரி,
ரேஷன் அரிசி கடத்தல், போதை பொருட்கள் விற்பனையை தடுத்திட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் மேவை. சண்முகராஜா தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட பதி, பொன். ரமணி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர். ஈரோடு இதேபோன்று, வாலிபர் சங்க செயலா ளர் பெரியசாமியை தாக்கிய சமூக விரோதி களை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், பவானி சாகர், 4 ரோட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எ.பி.ராஜூ தலைமை ஏற்றார். இதில், ஒன்றிய செயலாளர் டி.சுப்பிர மணி, பி.என்.ராஜேந்திரன் ஆகியோர் கண் டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மார்க் சிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கம், மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்ற னர்.