districts

img

தேர்தல் பணிகள் குறித்து டிஐஜி நேரில் ஆய்வு

நாமக்கல், ஏப்.18- குமாரபாளையத்தில்  தேர்தல் பணிகள் குறித்து டிஐஜி  நேரில் ஆய்வு செய்தார். இன்று நடக்க உள்ள மக்களவை தேர்தல் நடப்பதை யொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம் புதனன்று நிறைவு பெற்றது.  இந்நிலையில் வங்கி மேலாளர்கள், நிதி நிறு வன நிர்வாகிகள், நகைக்கடை அதிபர்கள், டாஸ்மாக் கண்கா ணிப்பாளர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் என பலத ரப்பட்டவர்களுடன் தேர்தல் சுமூகமாக நடைபெற, போலீ சார் பலகட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினர். மேலும்  வாக்குச்சாவடி ஏற்பாடு பணிகள் நடந்து வரும் நிலை யில், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வை யிட்டு வருகின்றனர். இதனையடுத்து தேர்தல் பாது காப்பு நடவடிக்கைககள் குறித்து, குமாரபாளையத்திற்கு வருகை தந்த சேலம் சரக போலீஸ் டிஐஜி உமா,  துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீ சாரிடம் கேட்டறிந்து, ஆலோசனை கூறினார்.

;