districts

img

மஞ்சூர் காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

உதகை, ஜூன் 20- மஞ்சூர் அரசு பள்ளியில் நடந்த சாலை போக்குவரத்து  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஐஜி முத்துச்சாமி, அங் குள்ள காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம்‌, உதகைக்கு கோவை சரக டிஐஜி முத்துச் சாமி ஞாயிறன்று வந்தார். இதனைத்தொடர்ந்து மஞ்சூர்‌ காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும்‌ ஆவணங் கள்‌, பதிவேடுகள்‌ மற்றும்‌ குற்ற வழக்குக்‌கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும், கண்டுபிடிக்காத வழக்கு களை கண்டுபிடிக்குமாறும்‌,  நிலுவையில்‌ உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில்‌ முடிக்க நடவடிக்கை மேற்கொள் ளுமாறு ‌அறிவுறுத்தினார். இதேபோல், இரவு ரோந்து பணியை முறையாக செய்து குற்றங்களை தடுக்க வேண் டும். பொதுமக்கள் மனு மீதான விசாரணை மேற் கொள்ள வேண்டும்‌. மனுதாரர்களிடம்‌ கனிவுடன்‌ நடந்து  கொள்ள வேண்டும்‌. பொதுமக்களிடம்‌ நல்ல முறையில்‌ கண் ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும், என்றார். இதனைத்தொடர்ந்து மஞ்சூர்‌அரசு மேல்நிலைப்பள்ளி யில்‌ சாலை போக்குவரத்து சம்மந்தமாக நடந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன்பின்னர்‌ இரு சக்கர வாகனத்தில் சாலையில் தலைக்கவசம் அணியா மல் வந்த பொது மக்களிடம் தலைக்கவசத்தின்‌ முக்கியத்து வம்‌ பற்றி எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவ சம் கொடுத்தார். இந்நிகழ்வில், நீலகிரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஆஷிஸ்‌ராவத்‌, துணை கண்காணிப்பா ளர் மகேஷ்வரன், மஞ்சூர் காவல் ஆய்வாளர் துரைராஜ்‌, உதவி ஆய்வாளர் தனபால்‌ உட்பட பலர் உடன் இருந்த னர்.