districts

img

ஓய்விற்குப் பிறகும் வேலை தேடும் அவலம்: ஓய்வூதியர் கருத்தரங்கம்

ஈரோடு, பிப். 23- பாஜக-வின் கொள்கை என்பது  புதிய பென்சன் திட்டமே. அதனால்  பணி ஓய்விற்குப் பிறகும் வேலை தேடும் அவலம் உள்ளது என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங் கோவன் ஒன்றிய அரசை சாடி னார். ஓய்வூதியர் அமைப்புகளின் சார்பில் ”சர்வதேச ஓய்வூதியம்” என்ற சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு  கூடலிங்கம் திடலில் நடைபெற் றது. அதில், புதிய பென்ஷன் திட் டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடை பெற்ற கருத்தரங்கிற்கு, மத்திய,  மாநில அரசு ஊழியர், ஆசிரியர், மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதி யர் அமைப்புகளின் சார்பில் மாவட் டச் செயலாளர் பி.சின்னசாமி தலைமை வகித்தார். ஒருங்கி ணைப்பாளர் சி.பரமசிவம் வரவேற் றார். தட்சிண ரயில்வே பென்சனர்ஸ்  யூனியன் தலைவர் ஆர்.இளங் கோவன் கருத்துரையாற்றினார். திரளானோர் கலந்து கொண்ட கருத்தரங்கின் நிறைவாக அகில  இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் வி.ராஜகோபாலன் நன்றி கூறினார். முன்னதாக, ஆர்.இளங்கோ வன் பேசுகையில், அனைவருக் கும் போதுமான பென்சன் கொடுத்த  முதல் நாடு சோவியத் யூனியன். அதன் விளைவாக மற்ற (முதலா ளித்துவ) நாடுகளில் அரசாங்கம் பென்சன் கொடுத்தது. இந்தியா விலும் 1957ல் பென்சன் வழங்கப்பட்டது. வாங்கிய சம்ப ளத்தில் 50 விழுக்காடு ஓய்வூதி யமாக அளிக்கப்பட்டது. அதற்கு அகவிலைப்படி வழங்கப்பட்டது. உத்தரவாதமான பென்சன் வழங் கப்பட்டது. அதன் பிறகு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.  1950ல் இந்தியாவின் 22 முதலா ளிகளின் சொத்து வெறும் ரூ.312 கோடி தான். அதே 2022 இல் 10  முதலாளிகளின் சொத்து 27 லட்சம்  கோடியானது. பெற்ற சுதந்திரம் யாருக்குப் பயன்பட்டது என்பது  இதன் மூலம் புரியும். லாபம் அதிக ரித்தது, ஆனால் லாபத்தில் தொழி லாளியின் பங்கு குறைந்தது. இந்தியாவில் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் அமலாக்கப்பட்டது. இபிஎப் வழங் கப்பட்டது. இத்திட்டத்தில் 77  லட்சம் பேர் உள்ளனர். அவர்க ளுக்கு ரூ.1000த்திற்கும் கீழ் தான் பென்சன் வழங்கப்படுகிறது. 8  லட்சம் பேருக்கு ரூ.1500 தான்  கிடைக்கிறது. அதற்கு மேல்  பென்சன் கிடையாது. அதற்கு  அகவிலைப்படியும் கிடையாது.  இதனை அரசாங்கம் கொடுக்க வில்லை. இந்நிலையில்தான், கடுமையான விலைவாசி உயர்வு, மருத்துவ செலவீனங்கள் அதிக ரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஓய்வு பெற்ற பின்னரும் வேலை தேடுகிற துயரமான நிலை மூத்த குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  வாஜ்பாய் ஆட்சிக்கு வந்த 2003  ஆம் ஆண்டு ஒரு உத்தரவு போட் டார். அதன் மூலம் புதிய பென்சன்  திட்டம் 2004ல் அமுலுக்கு வந்தது.  தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி யில் 2003லிருந்தே புதிய பென்சன் திட்டம் அமலானது. 2009ல் இட துசாரிகள் ஆதரவில்லாமல் ஆட் சிக்கு வந்த காங்கிரஸ், பாஜக ஆத ரவுடன் 2013ல் அதனை சட்டமாக் கியது. இடதுசாரிகள் மட்டும் எதிர்த் தனர். தற்போது, 1கோடியே 32  லட்சம் பேர் மாநில அரசு ஊழியர் கள் உள்ளனர். அவர்களில் 65 லட்சம் பேர் புதிய பென்சன் திட்டத் தில் உள்ளனர். பாஜகவின் கொள்கை என்பது புதிய பென்சன்  திட்டம் தான். அதனால் பழைய பென்சன் திட்டத்திற்கு ஆபத்து உள்ளது என்றார்.