districts

சுகாதாரமற்ற உணவுகள்: 38 பேருக்கு வயிற்றுபோக்கு

நாமக்கல், ஜூலை 4- சுகாதாரமற்ற உணவுகளை விற் பனை செய்த உணவகத்திற்கு சீல் வைக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில்  இயங்கி வந்த சுமதி மெஸ் என்ற தனியார் உணவகத்தில், விற்பனை செய்யப் பட்ட பரோட்டா, சைவ குருமா போன்ற உணவினை வாங்கி சாப்பிட்ட சேந்த மங்கலம் பகுதி, பச்சுடையாம்பட்டி புதூர் காலனி, குறவர் காலனி உள் ளிட்ட பகுதியை சேர்ந்த 38 நபர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஆட்சியர் ச.உமா சேந்தமங் கலம் பகுதியில் இயங்கி வந்த உண வத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சேந்தமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 நோயாளி களை நேரில் பார்வையிட்டு நலம் விசா ரித்து, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு வருபவர்களுக்கு வழங்கப் பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். பின்னர், சேந்தமங்கலம் கடைவீதி யில் இயங்கி வந்த மளிகை கடை,  உணவுப்பொருள் விற்பனை செய்யும்  கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி 6 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து, பேரூராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 2 கடைகளுக்கு நோட் டீஸ் வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.  

இதன்பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில், சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில் இயங்கி வந்த சுமதி  மெஸ் என்ற தனியார் உணவகத்தில் கடந்த 30 ஆம்தேதி விற்பனை செய் யப்பட்ட புரோட்டா, சைவ குருமா போன்ற உணவினை வாங்கி உட்கொண்ட, பச்சு டையாம்பட்டி புதூர் காலனி, குறவர் காலனி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 38  நபர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட் டதைத்தொடர்ந்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. உணவு பாதுகாப்பு தரம் சட் டம் 2006 ன் கீழ் பிரிவு 26, 27 ன் அடிப் படையில், உணவு பாதுகாப்புத்துறை யின் மூலம் சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில் இயங்கி வந்த சுமதி மெஸ் தனியார் உணவகம் தற்காலிகமாக உணவு தொழில் மேற்கொள்ள தடை செய்து  உணவகத்திற்கு சீல் வைக்கபட் டுள்ளது. மேலும், இத்தனியார் உணவகத் தில் உணவு அருந்தி உடல்நிலை பாதிக் கப்பட்ட 18 நபர்களுக்கு சிகிச்சை அளித்த சேந்தமங்கலம் கடைவீதியில் செயல் பட்டு வரும் வைஸ்னவி கிளீனிக் மருத் துவர் இளையராஜா அவர்கள் மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறைக்கு உரிய தக வல் வழங்காத காரணத்தினால் பொது  சுகாதாரம் தொற்று நோய் சட்டம் 1897 பிரிவு 2 ன் கீழ் வைஸ்னவி கிளீனிக் மருத்துவர் இளையராஜா அவர்க ளுக்கு நோட்டிஸ் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் வாயி லாக மேற்கண்ட பகுதிகளில் தூய்மை  பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, என் றார்.