districts

img

ஈச்சம்பாடி அணைக்கட்டு கால்வாயை  தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.29- ஈச்சம்பாடி அணையில் இருந்து  பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண் ணீர் கடைமடை விவசாயிகளை சென்று சேரும் வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிட கூட்டரங்கில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சாந்தி  தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், முன் னோடி விவசாயிகள் பங்கேற்று பேசினர். அப்போது, ஈச்சம்பாடி அணை யில் இருந்து பாசனத்துக்கு திறக் கப்பட்ட தண்ணீர் கடைமடை விவசாயிகளை சென்று சேர வில்லை. எனவே, உடனடியாக தூர்வாரி தண்ணீரை கடைமடை  வரை வந்து சேர நடவடிக்கை எடுக்க  வேண்டும். மாவட்டத்தில் நிலுவை யில் உள்ள நீர்ப்பாசன திட்டங் களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஒகேனக்கல் உபரி நீரை விவசாயத்துக்கு பயன்ப டும் வகையில் மாவட்ட நீர்நிலைக ளில் நிரப்பும் உபரிநீரேற்றும் திட்டத்தையும் விரைந்து செயல்ப டுத்த வேண்டும். பென்னாகரம் தாலுகாவில் வளர்க்கப்படும் நாட் டின மாடுகளை காக்கும் வகை யில் அவைகளை வனத்தில் மேய்க்க உரிய அனுமதி வழங்க  வேண்டும். வேளாண் பயிர்களை  சேதப்படுத்தும் காட்டுப்பன்றி களை சுட விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். வறட்சி காரண மாக விவசாயிகளின் பயிர்க் கடன் களை தள்ளுபடி செய்வதுடன், வறட்சி பாதிப்புக்கான நிவாரண மும் வழங்க வேண்டும். கடும்  வறட்சி காரணமாக கால்நடைக ளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. எனவே, அரசு சார்பில் மானிய விலையில் விவசாயி களுக்கு வைக்கோல் தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து பேசிய ஆட்சியர் சாத்தியமுள்ள கோரிக் கைகள் மீது நடவடிக்கை எடுப்ப தாகவும், இதர கோரிக்கைகள் குறித்து அரசு கவனத்துக்கு எடுத் துச் செல்வதாகவும் தெரிவித்தார்.  இந்தக் கூட்டத்தில், மாவட்ட  வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பாலக் கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ரவி, வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.