பொள்ளாச்சி, ஜூலை 12- பொள்ளாச்சியை அடுத்த கோட் டூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தரக்கு றைவாகவும், சாதிரீதியாகவும் இழி வுபடுத்தி பேசிய பாஜக நிர்வாகி களை வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப்பதிந்து, கைது வேண்டும் என வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஆனை மலை தாலுகா, கோட்டூர் பேரூராட்சி யில் பணிபுரிகின்ற தூய்மை பணியா ளர்களை கடந்த ஜூலை 9 ஆம் தேதி யன்று அதேபகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் ரமேஷ்குமார், ரவிக்குமார், அரவிந்தன் ஆகியோர் சாதிரீதியாக தரக்குறைவாக இழிவு படுத்தி பேசியுள்ளனர். இதுதொடர் பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைய டுத்து அரசு ஊழியர்களை பணி செய்ய விடமால் தடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் பாஜக நிர்வாகிகள் மூவர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
ஆனால், தற்போதுவரை போலி சார் அவர்களை கைது செய்ய வில்லை. அரசியல் தலையீடு காரண மாக போலிசார் மெத்தனமாக காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருந்ததியர் சமூ கத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் களை சாதிரீதியாக இழிவுபடுத்தி பேசி, கொலை மிரட்டல் விடுத்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த பாஜக நிர் வாகிகளை உடனடியாக வன்கொ டுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டூர் பேரூராட்சி வளாகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் தலைமை வகித் தார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப் போது வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், உரிய விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக் கப்படுவதாக உறுதியளித்தார். இத னையடுத்து தூய்மை பணியாளர் கள் அனைவரும் போராட்டத்ததை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.