திருப்பூர் ஜூன் 30- காலிப்பணியிடங்களில் முறைகேடு செய்யும் திருப்பூர் மண்டல போக்கு வரத்து நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங் கம் சார்பில் வெள்ளியன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் கந்தசாமி தலை மையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில், லஞ்சம், ஊழலுக்கு துணை போகக்கூடாது. பேருந்து போக் குவரத்து காலிப்பணியிடங்களில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதை கைவிட வேண்டும். ஆள்பற்றாக்குறைபை கார ணம் காட்டி விடுப்பு போட்டு ஊதிய குறைப்பு செய்யக்கூடாது. எதற் கெடுத்தாலும் மெமோ கொடுத்து அதீத தண்டனை வழங்கும் திருப்பூர் மண் டல போக்குவரத்து நிர்வாகத்தை கண் டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பொதுச்செயலாளர் விஸ்வ நாதன், துணைப் பொதுச்செயலாளர் கள் கொங்குராஜ் மற்றும் சுப்ரமணி, மண்டல பொருளாளர் தேவனேசன் உட் பட திரளான போக்குவரத்து ஊழியர் கள் பங்கேற்றனர்.