districts

img

அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

தருமபுரி, பிப்.16- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரு மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழி யர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். மக்கள் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்ப ரேட்டுகளுக்கு விற்பதை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் உள்ளிட்ட அத்துக்கூலி  ஊதிய முறைகளை ஒழித்து வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுபடுத்துதல், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளி யன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட் டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளா ளர் பி.எஸ்.இளவேனில், ஜாக்டோ – ஜியோ  நிதி காப்பாளர் கே.புகழேந்தி, மாவட்ட நிர்வா கிகள் டி.சண்முகம், பி.சங்கர், இலியாஸ், எஸ்.குணசேகரன், பி.மகேஸ்வரி, ஜி.முனி ராஜ், எம்.முனிராஜ், வட்ட நிர்வாகிகள் ஸ்ரீநாத், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.