தருமபுரி, பிப்.9- பாப்பிரெட்டிப்பட்டியில் நடை பெற்ற டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்த ரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு கல்லூரியின் முதல்வர் அன்ப ரசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை ஆர்.வி.எஸ் கலை அறிவி யல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ம.பழனிசாமி பேசு கையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கணினித்துறை மற்றும் தக வல் தொழில்நுட்பத்துறையில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியப்பட் டது. இன்றோ அது அன்றாட வாழ்க்கை யோடு இணக்கமான ஒன்றாக மாறிப் போய்விட்டது. கல்வி, ஊடகம், போக் குவரத்து, வங்கித்துறை என பல் வேறு திசைகளில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் வீச்சு விரிவடைந்து வரு கிறது. மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் வேண் டும். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு முன்னேற முயற்சி செய்யவேண்டும். வாய்ப்பு கள் வரும்போது தயக்கத்தால், அச் சத்தால் பின்வாங்குதல் கூடாது, என் றார். இந்நிகழ்வில், 500க்கும் மேற் பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், இருபால் துறைத்தலைவர்கள் மற் றும் பேராசிரியர்கள் கலந்து கொண் டனர்.