தருமபுரி, பிப்.20- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட் டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட் டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு சனியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங் கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைக்கப்பட்டுள்ளது. அம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, சீலிடப் பட்டுள்ளதை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பு அலுவலர் கள், வேட்பாளர்கள் முகவர்களால் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சி யர் ச.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின்போது தருமபுரி சார் ஆட்சி யர் சித்ரா விஜயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.