districts

img

தருமபுரி புத்தகத் திருவிழா அமைச்சர் துவக்கி வைத்தார்

தருமபுரி, செப்.9- தருமபுரி புத்தகத்திருவிழாவை சனி யன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.  தருமபுரி மாவட்டம், வள்ளலார் திடலில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி  புத்தகாலயம்  இணைந்து  நடத்தும்  தரும புரி புத்தகத் திருவிழாவை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். இப் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட் டிருந்த புத்தக அரங்குகளை பார்வை யிட்டார். இதனைதொடர்ந்து, நான் விரும்பும்  நூல், இயற்கைகாட்சி, தேச தலைவர் கள், தமிழ் அறிஞர்கள், விண்ணை யளப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற  28 மாணவ, மாணவியர் களுக்கு வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் புத்தகப் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிழ் களை வழங்கினார்.  இப்புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் மரு டி.என்.வி.எஸ். செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன், தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு இரா.செந்தில்,  தலைவர்  இரா.சிசுபாலன்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி  மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கள் மற்றும் பொதுமக்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.