districts

img

தருமபுரி புத்தகத் திருவிழா இன்று வரை நீட்டிப்பு

தருமபுரி, செப்.17- தருமபுரி புத்தகத் திருவிழா திங்களன்று (இன்று) வரை நீட்டிக் கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டா ளர்கள் தெரிவித்தனர். தருமபுரி மாவட்ட நிர்வாகம், தக டூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 5 ஆம் ஆண்டு புத்தக திருவிழா தருமபுரி வள்ளலார் திடலில் கடந்த செப்.9 ஆம் தேதியன்று தொடங்கி யது. இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏராளமான புத்த கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியை தின மும் ஏராளமான பொதுமக்கள், வாச கர்கள் மற்றும் ஏராளமான பள்ளி, கல் லூரி மாணவ, மாணவிகள் பார்வை யிட்டு புத்தகங்களை வாங்கி செல் கின்றனர். இந்த புத்தக திருவிழா  ஞாயிறன்று வரை 10 நாட்கள் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், வாசகர்க ளின் வேண்டுகோளுக்கிணங்க புத்த கத் திருவிழா திங்களன்று (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் புத்தக திரு விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித் துள்ளனர்.  மரக்கன்றுகள் வழங்கல் மேலும், இப்புத்தகத் திருவிழா வில் சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து, கட்டா யம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்ப டுத்திக் கொள்ள வேண்டும் என விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு புத்தகம் வாங்க வரும் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச் சுழலை பாதுகாக்க மரக்கன்று வழங் கப்படுகிறது. நாவல், அத்தி, புங்கன், கொய்யா, பாதம் உள்ளிட்ட ரக மரக் கன்றுகள் வழங்கப்படுகிறது. இது வரை 1500 மரக்கன்றுகள் வழங்கப் பட்டுள்ளது என என்று தகடூர் புத்தகப் பேரவை தலைவர் செந்தில், செய லாளர் இரா.சிசுபாலன் ஆகியோர்  தெரிவித்தனர்.