districts

img

குடும்ப விழாவாய் மாறிய தருமபுரி புத்தக கண்காட்சி

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஜூன் ‌24ல் துவங்கிய 4 ஆம் ஆண்டு  மாபெரும் புத்தகதிருவிழா ஜூலை 4 வரை 11 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.  இவ்வாண்டு தருமபுரி புத்தக திருவிழா குடும்ப  விழாவாக, இளைஞர்கள், மாணவர்கள் விழா வாக மாறியுள்ளதாக கண்காட்சி ஏற்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.. பாசிஸ்ட்டுகளிடம் அதிகாரம் மாட்டிக் கொண்டதன் விளைவாக வரலாற்றை திரித்து  பொய்மையை கட்டமைக்கும் சூழ்ச்சிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. வலதுசாரிகளின் வேட்டைக்காடாக நாடு மாறிவிடக்கூடாது என  இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக எண்ணம்  கொண்டோர் களத்தில் போராடிக்கொண்டிருக் கின்றனர்.  இவ்வமைப்புகளுக்குள் உள்ள நட்பு முரனை தள்ளிவைத்துவிட்டு ஒரே புள்ளியில் இணைந்து வலதுசாரிகளின் தந்திரங்களை  அறிவியல் துணை கொண்டும், தத்துவ பலம் கொண்டு மோதி வருகின்றனர். பல வண்ணங்க ளின் அழகை காவி நிறம் கொண்டு நிரப்பும் இந்த  முயற்சியை அறிவார்ந்த சமூகத்தின் இளை ஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்பது தரும புரி புத்தக கண்காட்சியில் எதிரொலிக்கிறது. “கைபேசியை விடு - புத்தகத்தை எடு” என்ற  கருப்பொருளை மையமாக கொண்டு புத்தக திருவிழா நடந்துவருகிறது.

இதில், தமிழகத்தின் முன்னணிப் பதிப்பா ளர்கள், நூல் விற்பனையாளர்கள் பங்கேற்று  இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசி யல், சூழலியல், நலவாழ்வு உள்ளிட்ட பல் வேறு பொருள்கள் பற்றிய புத்தகங்களும், சிறு வர்களுக்கான நூல்களும், முன்னணி எழுத்தா ளர்களின் புனைவு இலக்கியங்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வேண் டிய நூல்களும், போட்டித் தேர்வுகளுக்கான நூல்களையும் இடம்பெற செய்துள்ளனர். இம் மாபெரும் புத்தகத் திருவிழாவில் 100-க்கும்  மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட லட்சக்காணக் கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழா தருமபுரி மாவட்டம் முழு வதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஏதா வது ஒரு புத்தகத்தை வாசிக்கும் நிகழ்ச்சி நடத்தி யது. இதன் விளைவாக பள்ளி,கல்லூரி மாண வர்கள் புத்தக திருவிழாவுக்கு தினமும் ஆயிரக் கணக்கான மாணவர்கள் அலை அலையாக வந்து செல்கின்றனர். பள்ளி மாணவர்கள்‌சிறுகதை புத்தகம், இந்திய தேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வர்கள்‌ குறித்த புத்தகம்‌, பொது அறிவியல்,  ஓவியம்,போன்ற புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் வரலாறு,  பண்பாடு, தொல்லியல், அறிவியல் ஆராய்ச்சி  புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கிச் செல்கின்றனர். இதேபோன்று பொதுவுடமை தலைவர்களின் வரலாறு, திராவிடர்களின் வர லாறு, அம்பேத்கர் நூல்கள், புரட்சியாளர்க ளின் வரலாறு உள்ளிட்ட நூல்களை இளை ஞர்கள் வாங்குகிறார்கள். தான் வாங்கிய புத்த கங்களுடன் குழுவாக  செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு “எரியுதா குமாரு” என்பதுபோல் உள்ளது. 

 குடும்பம் குடும்பமாய் புத்தகத்திரு விழாவில் 

தினசரி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையா டல்களும், இலக்கியக் கூட்டங்களும், மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிக ளும் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை தமிழ கத்தின் முன்னணி எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகி யோரின் சொற்பொழிவு நிகழ்வுகள் நடந்து வரு கிறது. இதனை மக்கள் குடும்பத்துடன் நிகழ்ச் சியை கானவருவது சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சிக்கு வித்துடுகிறது.  மேலும் நிகழ்ச்சிக்கு வரும் சொற்பொழிவா ளர்கள் எழுதிய  புத்தகங்களை  வாங்கி அந்த புத்தகத்தில் சொற்பொழிவாளர்களிடம்‌கை யோப்பம் பெற்று  குடும்பத்துடன்‌ புகைப்படம் எடுத்துகொள்கின்றனர்.

புதிய எழுத்தாளர்கள், கவிஞர்களை ஊக்குவிக்கும் புத்தகதிருவிழா 

தருமபுரி மாவட்டத்தில் இளம் புதிய எழுத் தாளர்கள், கவிஞர்கள் அதிக அளவில் உரு வாகி வருகின்றனர். இவர்களின் படைப்புகளை  புத்தகமாக வெளியிட்டு புத்தகதிருவிழாவிற்கு வரும் சிறப்புசொற்பொழிவாளர்களிடம் வழங் கப்பட்டு புத்தகம் வெளியிடப்படுகிறது. இது  புதிய படைப்பாளிகளை உருவாக்கிட உந்துத லாக இருக்கிறது.  கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவின் வெளிப்பாடாக அதிக அளவில் மாணவர்கள்‌, இளைஞர்கள்‌, பொதுமக்கள்   புத்தகங்களை வாங்கி படிக் கின்றனர். இளைஞர்கள், மாணவர்கள் புத்தக கண் காட்சியில் தங்களின் தேடல்கள் பெரும்பாலும் அறிவியல், வரலாறு, பண்பாடு, தொல்லி யல் குறித்த புத்தகங்களை அதிகம் வாங்குவது  அதிகரித்துள்ளது என்பதே அந்த நம்பிக்கை யின் துளிர். ஆம் தேடல் உள்ள சமூகம் முன்னே றும்.

-ஜி.லெனின்