தருமபுரி, பிப்.11- தருமபுரியில் வீரமங்கை வேலுநாச்சி யார் அலங்கார ஊர்த்திக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தின் சார்பில் மலர் தூவி வரவேற்பளிக்கப்பட்டது. “விடுதலை போரில் தமிழகம்” தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக் கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அலங் கார ஊர்தி தருமபுரி மாவட்டத்திற்கு வியாழ னன்று வருகை தந்தது. இதைத்தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டம், பாகலஅள்ளி ஊராட்சியில் உள்ள லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வீர மங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர் திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபாலன், வே.விசுவநாதன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆ. ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சபரிராஜன், சிவக்குமார் ரூபன்குமார், சங் கர் கார்த்திக்,குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.