districts

img

தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம்:செந்தில்குமார் எம்.பி., வேண்டுகோள்

தருமபுரி, டிச.25- விளைநிலங்கள் வீடுகள் பாதிக்காத  வகையில் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டு மென தருமபுரி நாடாளுமன்ற உறுப்பி னர் செந்தில்குமார்,  ஒன்றிய ரயில்வே  துறை அமைச்சரிடம் வலியுறுத்தி யுள்ளார். இதுதொடர்பாக, எம்.பி., செந்தில் குமார் ஒன்றிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம்  அளித்த கடிதத்தில் கூறியிருப்பதா வது, தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத் திற்கான, நிலம் கையகப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கையகப்படுத்தும் நிலங்க ளுக்கு தேவையான இழப்பீடு வழங்க வும் அரசு சார்பில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், இந்த தருமபுரி மொரப்பூர்  இடையே ரயில் பாதை அமையும் இடத்தில் மூக்கனூர்  மற்றும் ஏ.ரெட்டிஹல்லி ஆகிய இரு கிராமங்களில்  6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். மேலும் 100 ஏக்கருக்கு விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள், இப்பாதை அமையும் பகுதியில் உள்ளதால், நிலங்களை கையகப்படுத்தும் பொழுது நிலங்கள் பாதிப்பிற்கு உள் ளாகிறது.  எனவே, ரயில் பாதை அமையும் இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் அளவிற்கு வேறு பாதையில் இந்த  ரயில் திட்டத்தினை நடைமுறைப்ப டுத்தினால், இரு கிராம மக்களின் விவ சாய நிலங்கள் பாதிக்காது எனவும், அதற்கேற்ப திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், அந்த கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.  அதுமட்டுமின்றி, கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் கள், பொம்மிடி ரயில் நிலையத்திலும், சென்னை திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மொரப்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வழி வகை செய்ய வேண்டும் என வலியு றுத்தியுள்ளார்.