சோலார் பேனல் மூலம் மின் உற்பத்திக்கு அனுமதி
தருமபுரி எம்.பி., செந்தில் குமார் தகவல்
தருமபுரி, ஜூன் 6- தருமபுரி மாவட்டம் ஜிட்டாண்ட அள்ளி தேசிய நெடுஞ்சாலை மையப்பகுதியில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதா தரு மபுரி எம்.பி., செந்தில்குமார் தெரிவித்துள் ளார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார் கடந்த ஆண்டு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி அவா்களை நேரில் சந்தித்து தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதிகளில் சோலார் பேனல்கள் அமைத்து அதன் மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் கடிதம் வழங்கினார். கடிதம் வழங்கியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக் காமல் காலம் தாழ்த்திவந்தனா் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் கடிதம் எழு தினார் இதனையடுத்து மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நெடுஞ் சாலையின் மையப்பகுதியில் சோலார் பேனல் அமைத்து சூரிய மின்னாற்றல் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்ய தற்போது அனு மதி வழங்கியது. முதற்கட்டமாக தருமபுரி மாவட்டம் ஜிட்டான்ட அள்ளி முதல் தரும புரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 844 இல் பாராளுமன்ற உறுப்பினரின் உள் ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சோலார் பேனல்களை பொருத்தி சூரிய ஆற்றலில் இருந்து மின்னாற்றல் தயாரித்து அதனை வணிக ரீதியாக பயன்படுத்த நடவ டிக்கை எடுத்துள்ளார். இத் திட்டம் இந்தியா விலேயே முதன் முறையாக தருமபுரி பாரா ளுமன்ற தொகுதியில் செயல்படுத்த உள் ளது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி - நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு சேர்க்கை துவக்கம்
தருமபுரி, ஜூன் 6- கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டா ளர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் தருமபுரி மண்டல இணைப்பதிவாளர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மொரப்பூரில் செயல்படும் தருமபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடு மற்றும் அதன் நுட்பங்கள் பயிற்சிக் கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை, தங்கத்தை கணக்கிடும் முறை, தங்கத்தை உரசியும் உரசாம லும் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறி தல், வங்கிகளில் நகை கடன் வழங்கும் முறை, ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை முடித்தவர்கள் தேசிய மற்றும் கூட்டு றவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட் டாளராக பணிபுரியலாம். இந்த பயிற்சியில் சேர குறைந்த பட்ச கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தி ருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயிற்சியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனிடம் பாலியல் சீண்டல் - ஒருவர் கைது
கோவை, ஜூன் 6– மளிகை கடையில் பொருட்கள் வாங்க வந்த சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடை உரிமையாளரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதி யில் மளிகை கடை நடத்தி வருபவர் வாசுதேவன். இவர் மனைவியை பிரிந்து கடந்த 6 வருடமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஞாயிறன்று அவரது கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது வாசுதேவன் சிறுவனை கடைக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைய டுத்து வீட்டிற்கு சென்ற சிறுவன், மளிகை கடைக்காரர் தன்னி டம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்தது குறித்து பெற் றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வாசுதேவனை பிடித்து விசாரித்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். சிறுமி கடத்தல் - வாலிபர் கைது கடந்த மே 11 ஆம் தேதியன்று பெரியநாயக்கன்பாளை யத்தைச் சேர்ந்த சிறுமி மாயமானார். அவர் ஜாகீர் உசேன் (21) என்கிற வாலிபரோடு சென்றதாக கிடைத்த தகவலை யடுத்து, பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில், இருவரும் கர்நாடக மாநிலம், மைசூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மைசூர் சென்ற போலீசார் சிறுமியை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். மேலும், ஜாகீர் உசேன் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை - தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம்
கோவை, ஜூன் 6- தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், (NAPS) தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் கோயம்புத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஜூன் 13 ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் மத்திய,மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 500 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில், பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகு நர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகை யும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி-யின் கீழ் தொழிற்பயிற்சி பெற்ற வர்கள்,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவ ணங்களுடன் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் கோயம்புத்தூர்-29 அவர்களை 9486447178, 9442651468, 9840343091 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி
கோவை, ஜூன் 6- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதி யைச் சேர்ந்த மாற்றுதிற னாளி முகமது சாதிக் பாஷா மேட்டுப்பாளையம் கோத்த கிரி சாலையில் அலுவல கம் அமைத்து வீட்டுமனை களை விற்று வருகிறார். இங்கு டாஸ்மாக் பார் அமைப்பதற்கு என அலுவ லகத்தை காலி செய்யக் கோரி கட்டாயபடுத்தியுள்ள னர். இதற்கிடையே கடந்த ஏப்.10 ஆம் தேதி மர்ம நபர் கள் சிலர் அலுவலகத்தை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து முகமது சாதிக் பாட்சா காவல் நிலையத் தில் புகார் அளித்து நடவ டிக்கையும் எடுக்காததால் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன் தன் மீது மண் ணெண்ணெய் ஊற்றி தற் கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அங்கு இருந்தவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஈரோடு, ஜூன் 6- திருட்டு, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ள தால் வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோபி பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (45), பழனிச்சாமி (38) இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 7 ஆம் தேதி கோபியில் உள்ள ஒரு மதுக்கடையில் குடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த சேலத்தை சேர்ந்த கவுதம் (22) என்பவர் இருவரிடமும் மதுபானம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருவரும் மதுபானம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கவுதம் இருவரையும் பாட்டி லால் தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட் டது. இதையறிந்த கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர். பின்னர் அவரை கோபி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கவுதம் மீத திருட்டு, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதால் கவுதமை குண்டர் சட்டத் தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கவுதமை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய ஆட்சியர் உத்தர விட்டார். அதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.
வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்
கோவை, ஜூன் 6- தமிழகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப் பட உள்ளது. கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் காளியா புரம்,பொகலூர்,செக்கனூர்,ஆச்சிபட்டி,அரசூர், வரப்பட்டி உள்ளிட்ட 31 கிராம பஞ்சாயத்துக்களில் (ஜூன் 7 ஆம் தேதி) இன்று நடைபெற உள்ளது. இம்முகா மில் வேளாண்மை-உழவர் நலத்துறை,கால்நடைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,தோட்டக்கலைத்துறை,வேளாண் விற்பனைத்துறை,வேளாண் பொறியியல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காதி மற்றும் கதர் கிராம தொழில்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத் துறை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், இம்முகாமில் பட்டா மாறுதல், பயிர் கடன் மற்றும் கிசான் அட்டை விண்ணப்பம் பெறுதல் உள்ளிட்ட நடைபெறும் என மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள் ளது.
ச.பெரியபாளையம் தீம் பார்க்கில் நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
திருப்பூர், ஜூன் 6- திருப்பூர் அருகே ச.பெரியபாளையம் தீம் பார்க்கில் விடு முறையை கழிக்க குடும்பத்துடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வி்டப்பட்டுள்ள நிலை யில், திருமுருகன் பூண்டியை சேர்ந்த பாஸ்கர் (52), ஸ்டெல்லா (38) தம்பதி கோடை விடுமுறையை கழிக்க தனது மகன்கள் ஸியாம் ராபின்சன் (15), ஐசக் (12) ஆகியோருடன் அருகில் வசிக்கும் சில குடும்பத்துடன் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, சர்கார் பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஜீ ரிசார்ட் பொழுது போக்கு தீம் பார்க்கிற்கு திங்களன்று காலை சென்றனர். அங்கு அவரது மகன் ஸியாம் ராபின்சன்(15) மற்றும் சிலர் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஸியாம் ராபின்சன் எதிர்பாராத விதமான நீரில் மூழ்கி உயி ருக்கு போராடியதாக தெரிகிறது. உடனடியாக அந்த சிறு வனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறு வனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஊத் துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
நிலம் அளந்து தராவிட்டால் தற்கொலை: திருப்பூரில் கைத்தறி நெசவாளர்கள் மனு
திருப்பூர், ஜூன் 6- திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கைத்தறி நெசவாளர் கள் 1998 ஆம் ஆண்டு அரசின் பங்களிப்புடன் பணம் செலுத்தி 218 பேருக்கு 3 சென்ட் வீதம் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர். ஆனால் அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் முறை யாக பயனாளிகளுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங் காமல் வேறு நபர்களுக்கு வழங்கி விட்டதாக கைத்தறி நெச வாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில் மாவட்ட நிர் வாகம் பயனாளிகளுக்கு நிலம் அளவீடு செய்து தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் 2019 ஆம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து மூன்று வருடமாகியும் நீதி மன்ற தீர்ப்பின்படி இதுவரை நிலம் வழங்கவில்லை. இது குறித்து மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இன்னும் 210 பேருக்கு பட்டா வழங்க வேண்டிய நிலையில் அந்த மாதமே மேலும் 14 பேரின் விவரங்களை பட்டா வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் பெற்றுக்கொண்டது. அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் அதிகாரி கள் தங்களை அலட்சியப்படுத்துவதாகவும், இனியும் கால தாமதப்படுத்தினால் மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீமிடம் நெசவாளர்கள் திங்களன்று மனு அளித்தனர்.
பெண்கள் வேலைவாய்ப்புக்கு யெஸ் இந்தியா கேன் திட்டம்
திருப்பூர், ஜூன் 6- தென் தமிழகத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு பெற திருப்பூரில் எஸ் இந்தியா கேன் எனும் திட்டத்தை தனியார் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த இருப்பதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டி யன் கூறினார். அவரது இல்லத் திருமண விழா திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதை யொட்டி இங்கு வந்திருந்த ஜான் பாண்டியன் ஞாயிற்றுக்கி ழமை நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில், தென் தமிழகத்தில் தொழில் வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திருப்பூரில் உள்ள வால்ரஸ் என்ற தனியார் நிறுவ னத்துடன் இணைந்து எஸ் இந்தியா கேன் என்னும் பெயரில் திட்டங்கள் செயல்படுத்த இருக்கிறோம். அங்குள்ள மக்கள் எஸ் இந்தியா கேன் அமைப்பு சார்பில் இந்த நிறுவனத்தின் மூலம் துணிகளை வாங்கி அதை ஆடையாக தைத்து சந்தைப்படுத்தவும், ஆடையாக உருவாக்கிய துணிகளை யும் இந்நிறுவனம் தாங்களே பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, இது ஏராளமானோருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும். இதன்படி கிராமப்புறங்க ளில் உள்ள பெண்கள் நகரங்களுக்கு வராமல், இருக்கும் இடங்களிலேயே தங்கள் திறமைகளை பயன்படுத்தி தொழி லில் முன்னேறலாம், என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது வால்ரஸ் நிறுவன உரிமையாளர் டேவிட் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
திருப்பூரில் வீட்டை அபகரிக்க முயற்சி: முன்னாள் ராணுவ வீரர் மனைவி தர்ணா
திருப்பூர், ஜூன் 6- திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதி யில் வசித்து வருபவர் அன்னமேரி. அவரது கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். முன்னாள் ராணுவத்தினர் என்ற அடிப் படையில் கடந்த 2006ஆம் ஆண்டு இவர்கள் குடும்பத்தாருக்கு சுமார் 2600 சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள் ளது. இங்கு வீடு கட்டி 35 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், வீட்டின் உரிமை உத்தரவு நகல், வரி ரசீது, குடும்ப அட்டை, ஆதார் கார்டு அனைத்தும் கணவர் பெயரில் உள் ளது. அவர் கடந்த 2015ஆம் ஆண்டு உயரிழந்து விட்டார். தற்போது தங்களுக்கு அறிமுக மில்லாத ஜெபமாலை மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் தனது கணவர் உயிரோடு இருக்கும் போது கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனுக்காக வீட்டை விற்று விட்டதாக ஆவணங்களை போலியாக தயாரித்து தன்னை யும், தன் குடும்பத்தையும் உடனடி யாக காலி செய்ய வற்புறுத்தி வருவதா கவும் கூறினார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளித்த நிலையில், நில அபகரிப்பு பிரிவு விசாரணைக்கு அவர் அனுப்பி வைத்தார். ஆனால் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஜெபமாலையின் மகன் கார்த்திக் தங்களை காலி செய்ய வற்புறுத்துவ தோடு, தங்களை அவமரியாதையாக பேசி வருவதாகவும், தங்கள் வீட்டில் ஆங்காங்கே கேமராவை வைத்து அடி யாட்களை வைத்தும் மிரட்டி வரு வதாகவும், அவர்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அன்னமேரி குடும்பத் தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அணைப்பாளையம் பாலம் விரைந்து முடிக்க வேலம்பாளையம் நகர மாதர் சங்கம் கோரிக்கை
திருப்பூர், ஜூன் 6- திருப்பூர் வேலம்பாளையம் அருகே சிறு பூலுவபட்டி பகுதியில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் வேலம்பாளையம் நகர ஐந்தாவது மாநாடு ஞாயிறன்று நடை பெற்றது. இம்மாநாட்டில் வேலம்பாளையம் நகரத் தலைவராக எஸ்.குணசுந்தரி, துணைத் தலைவராக ஏ.கிருஷ்ணவேணி, செயலாளராக ஆர்.கவிதா, துணைச் செய லாளராக பி.செல்வி, பொருளாளராக எஸ். சாந்தி ஆகிய நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் கொண்ட நகரக்குழு தேர்வு செய்யப் பட்டது. இம்மாநாட்டில் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கக் கொடியினைஏ.கிருஷ்ணவேணி ஏற்றி வைத்தார். நகரத் தலைவர் பி.செல்வி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். மைதிலி தொடக்கி வைத்துப் பேசினார். வேலையறிக்கையை நகரச் செயலாளர் ஆர். கவிதாவும், வரவு- செலவு அறிக்கையை நகரப் பொருளாளர் எஸ்.குணசுந்தரியும் முன்வைத்தனர். மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.சாவித்திரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், வாலிபர் சங்க வேலம்பாளையம் நகரப் பொருளாளர் ராம்கி, சிஐடியு மோட்டார் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் செல்வகுமார், பனியன் சங்க பகுதி செயலாளர் பி. சின்னச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நகரக் குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி, மத்தியக் குழு உறுப்பினர் என். அமிர்தம் நிறைவுரை ஆற்றினார். இறுதியில் நகரப் பொருளாளர் எஸ்.சாந்தி நன்றி தெரிவித் தார்.
கம்பி வேலி தடுப்பு கதவு: நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற கோரி தர்ணா
திருப்பூர், ஜூன் 6- திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் பட் டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் கம்பி வேலி அமைத்து தடுப்புக்கதவு போடப் பட்டதை அகற்றும்படி நீதிமன்றம் உத்த ரவிட்டும் நடவடிக்கை எடுக்காததைக் கண் டித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிரா மத்தி 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து.வரும் இந்த மக்களுக்கு கடந்த 1993 ஆம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது. எனினும் இப்பகுதி மக்களுக்கு பிரதான சாலைக்கு வருவதற்கான சாலை வசதி செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த மக் கள் நடந்து செல்லும் வழித்தடத்தை மறைத்து கம்பி வேலி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சார் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு போடப்பட்ட கம்பி வேலியை, 2018 ஆம் ஆண்டு அகற்றப்பட் டது. இதையடுத்து 2019 ஆய்வு மேற் கொண்ட அப்போதைய தாழ்த்தப்பட்ட பழங்குடி ஆணையத்தின் ஆணையர் எல். முருகன் அங்கு தடுப்புக் கதவு அமைக்க உத்தரவிட்டதாகவும், அப்போது போடப் பட்ட தடுப்புக் கதவு தற்போது வரை அகற்றப்படவில்லை. பட்டியில் சமூகத் தினர் பயன்படுத்தும் நடைபாதையை கம்பி வேலி மற்றும் போடப்பட்ட தடுப்புக் கதவை அகற்றக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த, நிலையில், நீதிமன்றம் கம்பி வேலியையும், தடுப்புக் கத வையும் அகற்றும்படி தீர்ப்பு அளித்தது. ஆனால் இதுவரையில் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. இதைக் கண்டித்து அப்ப குதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உட னடியாக நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடுக மாதர் சங்க ஊத்துக்குளி மாநாடு கோரிக்கை
திருப்பூர் ஜூன் 6- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுக்கா எட்டாவது மாநாடு ஞாயிறன்று ஊத் துக்குளி டவுன் மைதிலி சிவராமன் நினைவரங்கத்தில் தாலுக்கா தலைவர் அம்புஜம் தலைமையில் நடைபெற் றது. தாலுக்கா துணைத் தலைவர் பாப் பாத்தி கொடியேற்றி வைத்தார். தாலுக்கா குழு உறுப்பினர் வண்ணக் கொடி வரவேற்றார். மாவட்ட பொரு ளாளர் எஸ்.ஷகிலா மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக் கையை தாலுக்கா செயலாளர் கு. சரஸ்வதி முன்வைத்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.குமார், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஈ. வளர்மதி, விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கொளந்தசாமி, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் வி.கே.பழனி சாமி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி தாலுக்கா தலைவர் கை. குழந்தைசாமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுக்கா தலைவர் ஆர்.மணி யன், தாலுக்கா செயலாளர் க.பிர காஷ், வாலிபர் சங்க தாலுக்கா செயலா ளர் க.லெனின், மாணவர் சங்க தாலுகா செயலாளர் கு.பாலமுரளி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு: மாதர் சங்க தாலுகா தலைவராக செல்வி, செயலாளராக கு.சரஸ்வதி, பொருளாளராக சி.வண்ணக்கொடி, துணைத் தலைவர்களாக வ. மீராலட்சுமி, லட்சுமி, துணை செயலா ளர்களாக சசிகலா, ர.அம்சவேணி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாதர் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் என்.அமிர்தம் மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற் றினார். இந்த மாநாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித் தனர். பாரதி நகர் கிளை செயலாளர் அம்சவேணி நன்றி தெரிவித்தார்.
பொன்முத்து நகர் குடியிருப்பு மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா
திருப்பூர், ஜூன் 6- திருப்பூர் பொன்முத்து நகர் குடியிருப்பு மக்கள், மாநக ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்முத்து நகர் குடி யிருப்பு பகுதியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களை சேரந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக சமூக நல்லினக் கத்தை சீர் குலைக்கும் வகையில் அப்பகுதியில் அத்து மீறி அடியாட்களுடன் நுழைந்த சிலர் சத்யசாய் அறக்கட் டளை என்ற பெயரில் வழிபாட்டு மையம் அமைக்க ஏற்பாடு கள் செய்து வருவதாக இப்பகுதி மக்கள் கூறினர். இது அப்பகுதியில் அமைதியாக சமூக நல்லினக் கத்துடன் வசித்து வரும் குடியிருப்போருக்கு அமைதியை சீர் குலைக்கும் செயலாக உள்ளது, மேலும் முறையான கட் டிட அனுமதி பெறாமல் வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக வழிப்பாட்டு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், பல முறை அதிகாரிகளிடமும், அதே போல் 3 ஆவது மண்டல அலுவலத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் திருப்பூர் மாநக ராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.