தருமபுரி, ஜூன் 19- தருமபுரியில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருவதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித் துள்ளார். தருமபுரியில் புத்தக திருவிழா மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்த காலயத்தின் பொறுப்பாளர்கள் மற் றும் அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், தரும புரி தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்த காலயத்துடன் இணைந்து இந்த ஆண்டு தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகின்ற ஜூன் 24 முதல் ஜூலை 4 வரை 11 நாட்களுக்கு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இப்புத்தக திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக் கான தலைப்புகளைக் கொண்ட லட் சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளது. இத்திருவிழாவில் நாள் தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி கடை கள் திறந்திருக்கும். நாள்தோறும் பகல் நேரத்தில் தருமபுரி மாவட்டத்தின் பல் வேறு இலக்கிய அமைப்புகள் நடத் தும் கலந்துரையாடல்களும், இலக்கி யக் கூட்டங்களும், மாணவ, மாணவி யர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சி களும் நடைபெற உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன, என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, மக ளிர் திட்ட அலுவலர் பாபு, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தரும புரி தகடூர் புத்தகப் பேரவை செயலா ளர் இரா.செந்தில், தலைவர் இரா.சிசு பாலன், பொருளாளர் எம்.கார்த்தி கேயன், ஒருங்கிணைப்பாளர் தங்க மணி, பாரதி புத்தகாலய நிர்வாகி அறி வுடைநம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.