தரமற்ற உணவு பொருள்கள் அழிப்பு
தருமபுரி, மார்ச் 17- அரூர் பேரூராட்சியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தர மற்ற உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித் தனர். தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் உள்ள உணவ கங்கள் மற்றும் பேக்கிரிகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. உணவகங்கள், பேக்கரி, சில்லி சிக்கன், மீன் கடை என கடைகளில் ஆய்வு மேற்கொண் டனர். அப்போது பேக்கிரி ஒன்றில் அதிக நிரமேற்றிய இனிப்பு 5 கிலோவை பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல் மீன் வறுவல் கடையில் அதிகநிறமேற்றி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்ய 3 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்காத உணவு கடைகளுக்கு ரூ 1000,ரூ 2000, வீதம் 10 கடை களுக்கு ரூ.15000, அபராதம் விதித்தனர்.
சேலம் மத்திய சிறையில் திடீர் சோதனை கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
சேலம், மார்ச்17- சேலம் மத்திய சிறையில் காவல்துறை துணை ஆணை யாளர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு, செல்போன் சார்ஜர், கஞ்சா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மத்திய சிறையில் 1300 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், செல்வாக்கு உள்ள கைதிகள் செல்போன் கஞ்சா உள்ளிட்டவைகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று குண்டாசில் கைது செய்யப்பட்ட டேவிட் என்கின்ற உதயகுமார் கோபியை சேர்ந்த நவீன் குமார் மற்றும் குமார் ஆகியவற்றிடம் இருந்து சிறை வார்டன் மூன்று செல்போனை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஜெயிலர் மதிவாணன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி, உதவி ஆய்வாளர் சரவணன், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் சிவகுமார், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வெள்ளியன்று மத்திய சிறையில் தீடீர் சோதனையில் ஈடுபட்டனர். கைதிகள் தங்கும் அறைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சிறை வளா கத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா, செல்போன் சார்ஜர் மற்றும் 15 ஆணிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் கஞ்சா, செல்போன் சார்ஜர் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை - 2 பேர் கைது
உதகை, மார்ச் 17- உதகையில் 6 கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை காட்டி வந்த பெங்க ளூருவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப் பட்டனர். இவர்கள் சுற்றுலா பயணிகள் போர் வையில் தங்கி இருந்து கைவரிசை காட்டி யது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உலக பிரசித்திபெற்ற சுற்றுலா தளமாக உதகமண்டலம் உள்ளது. இங்கு, வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநி லங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா தலங் களில் நிறுத்தப்படும் கார்களின் கண்ணாடி யை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்தது. கடந்த மாதம் பைன்பாரஸ்ட் பகுதியில் கேரள தம்பதியின் கார் கண்ணாடியை உடைத்து தங்க மற்றும் வைர நகைகள் திருடப்பட்டது. இதேபோல் கடந்த 15 ஆம்தேதி தொட்டபெட்டா செல்லும் வழியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஒரு கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் காரின் முன் பகுதியில் இருந்த கேமராவில் வீடியோவாக பதி வாகியிருந்தது. மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதேபோல் அண்மையில் சென்னை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உதகைக்கு சுற்றுலா வந்தார். அவர் வந்த காரை உதகை டீ தொழிற்சாலை அருகில் நிறுத்தி இருந் தார். அந்த காரை உடைத்து. அதிலிருந்து செல்போன், மடிக்கணினி, உள்பட ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான திருடி சென்றனர். இதனையடுத்து, இந்த திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், வீடியோவில் இருந்த ஆசாமிகள் வெள்ளியன்று தொட்ட பெட்டாவில் இருந்து சேரிங்கிராஸ் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது வீடி யோவில் காட்சியளித்த அதே ஆடைகளை அணிந்து வந்திருந்ததால், அவர்களை அங்கி ருந்த வாலிபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஆரிப் மற்றும் சுப்பியான் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர் களிடமிருந்து மடிக்கணினி, செல்போன் பறி முதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், பெங்களூருரில் சாலையோரம் துணி விற் பனை செய்யும் தொழில் ஈடுபட்டு வந்தவர்கள் அங்கு வருமானம் குறைவாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் போர்வையில் உதகைக்கு வந்து அதை எடுத்து தங்கி, இங்கு வசதியானவர்களின் கார்களை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 6 கார்களை உடைத்து திருடி உள்ளனர், என்றனர்.
மெகா ஜவுளி பூங்கா:
தமிழ்நாடு உள்பட ஆறு மாநிலங்களில் தலா ஒரு மெகா ஜவுளி பூங்கா அமைக் கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பதற்கு திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்புத் தெரிவித்துள் ளது. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், ஈ.குமரலிங்கபுரம் பகுதியில் 1100 ஏக்கர் பரப் பளவில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த ஜவுளி பூங்கா அமைய உள்ளது. பஞ்சு முதல் ஆடை ஏற்றுமதி வரை அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்த நிலையில் இந்த பூங்கா அமையும். இது இந்திய முதலீட்டை ஈர்த்து, வேலைவாய்ப்பை வழங்கும் என்று ஏற்றும தியாளர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பட்டாசு குடோன் உரிமையாளர் கைது
தருமபுரி, மார்ச் 17- வெடி விபத்துக்கு காரண மான பட்டாசு குடோன் உரி மையாளர் கைது செய்யப் பட்டார். தருமபுரி மாவட்டம், நாக தாசம்பட்டி கிராமத்தில் பட் டாசு குடோன் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உடல் சிதறி பரி தாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அதன் உரி மையாளர் சரவணன் வெள் ளியன்று கைது செய்யப் பட்டார்.
பறவைகளுக்காக மண்பாண்டம் வழங்கல்
கோவை, மார்ச் 17- கோடை காலம் துவங்க உள்ள நிலையில், பல்வேறு தன் னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் பறவைகள் மற் றும் செல்ல பிராணிகளுக்கு நீர் ஆதாரங்கள் ஏற்படுத்தி வரு கின்றனர். பல்வேறு இடங்களில் பறவைகளுக்காக வீட்டின் மாடிகளில் பறவைக்களுக்காக கூடுகள் அமைத்து உணவு மற் றும் குடிநீர் வைத்து வருகின்றனர். அதன்ஒருபகுதியாக “பீப் புள் பார் கேட்டில் இன் இன்டியா” (People For Cattle In India) என்ற தன்னார்வ அமைப்பு பறவைகளுக்கு தண்ணீர் வைப்ப தற்காக மண்பாண்ட தொட்டிகளை வழங்கியுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ் ணன் கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு இந்த மண்பாண்ட தொட்டிகளை வழங்கினார்.