கோவை, நவ.24- கோவையில் 108 பெட்டி கடைக ளில் நடத்தப்பட்ட சோதனையில், தமிழ் ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. கோவை மாவட்டம் முழுவதும், மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறைஇணைந்து, தமிழ்நாடு அர சால் தடைசெய் யப்பட்ட புகை யிலை பொருட் களை தடுக்கும் பொருட்டு கள ஆய்வுமேற்கொண்டது. 23 சிறப்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்.1ஆம் தேதி முதல் நவ.23 தேதி வரை சுமார் 108 பெட்டிக்கடைகளில் நடத்தப்பட்ட கள ஆய்வில், 87.516 கிலோ தடைசெய்யப்பட்ட பான்ம சாலா மற்றும் குட்கா பறிமுதல் செய் யப்பட்டு அழிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 87,500 ஆகும். மேலும் களஆய்வின் முடிவில் 106 கடைகளுக்கு முதல் முறை குற்றம் புரிந்ததற்கு அபராதமாக ரூபாய் 5000/- வீதம் மொத்தம் ரூபாய் 5.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டா வது முறையாக குற்றம்புரிந்த ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரமும், மூன்றா வது முறையாக குற்றம் புரிந்த கடைக்கு அபராதமாக ரூ.25,000 விதிக்கப்பட்டு கடையின் உரிமமும் ரத்து செய்யப் பட்டு மூடப்பட்டது.