தருமபுரி, அக்.14- தக்காளி செடியில் வைரஸ் நோய் தாக்குதலால், தோட்டத்தை டிராக் டரை வைத்து அழித்த விவசாயி, வேளாண் துறை மூலம் தமிழக அரசு விதை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள் ளார். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவ சாயிகள் வருடம் முழுவதும் தக் காளி சாகுபடி செய்து வருகின்ற னர். இங்குள்ள தக்காளி மார்கெட்டி லிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்க ளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர். தற்போது பல தனி யார் நிறுவனங்கள் தரமில்லாத தக் காளி விதைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுதெரியா மல் பல விவசாயிகள் அந்த விதை களை வாங்கி பயிரிட்டுள்ளனர். இந் நிலையில், பி.கொல்லஹள்ளி, ரெட் டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, சோமனஹள்ளி உள்ளிட்ட கிராமத் தில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளன. புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற் றும் பழங்களில் கோடுகள் உள்ளிட் டவைகளால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கர் தக்காளி விளைவிக்க 1 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டி யுள்ளதாகவும், பயிர்களில் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்திக் கும் நிலையில், கிலோ தக்காளி 10 ரூபாய் வரை விற்பனை செய்வ தால் விவசாயிகள் விரக்தியில் உள் ளனர். இந்நிலையில், பி.கொல்லப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்தி வேல் என்ற விவசாயி, தனது விவ சாய நிலத்தில் பயிரிட்டுள்ள தக் காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த நிகழ்வு விவசாயம் மத்தி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தக்காளி விவசாயிக ளுக்கு நட்டம் ஏற்படாதவாறு, தரும புரி மாவட்டத்தில் தக்காளி பதப்ப டுத்தும் கிடங்கு அமைக்க வேண் டும். தக்காளி விதையை தரமான தாக வேளாண்மைத்துறை மூலம் வழங்க வேண்டும் என விவசாயி சக்திவேல் உள்ளிட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.