தமிழ்நாட்டில் வாழும் உள் நாட்டு மீனவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பொதுப்பணித் துறை, நீர்வளத்துறை மற்றும் அர சின் இதர துறைகளுக்கு கட்டுப்பட்ட அணைகள், ஏரிகள், குளங்கள் மற் றும் ஆறுகளில் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித்து, நகர்ப்பகுதி மீன் மார்க்கெட்டுகள், சாலையோர சிறு சிறு கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களிலும், தலைச்சுமையா கவும் ஊருக்குள் தாங்கள் பிடிக்கும் மீன்களை கொண்டு சென்று விற் பனை செய்து வருகிறார்கள். உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் பிடிக்கும் மீன்பாசி குத்தகை உரிமை யானது (மீன்பிடிக்கும் உரிமை) மீன வர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னு ரிமை அடிப்படையில் அரசாணை எண் : 332/1993 ன்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உள்நாட்டு மீனவர் வாழ் வாதாரம் பாதிக்கும் வகையில் மீன் வளத்துறை மூலம் உள்நாட்டு அணை கள், ஏரிகள், குளங்களில் மீன்பாசி குத்தகையில் பொது ஏல நடைமுறை கொண்டு வரப்பட்டது. இந்த உத்த ரவை எதிர்த்து அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் (வரட்டுப்பள்ளம் அணை வழக்கு) மீன்பாசி குத்தகை உரிமையை பொது ஏலம் விடும் நடை முறையை ரத்து செய்து, மீனவர் கூட்டு றவு சங்கங்களுக்கு தான் முன்னு ரிமை அடிப்படையில் மீன்பாசி குத்த கையை வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங் கிய தீர்ப்பாணையை (W.A No. 384 of 2017 date 16.11.2017) மேல்முறை யீட்டில் இந்திய உச்சநீதிமன்றமும் Petition (B) for Special Leave to appeal (C) No (s). 3171/2018 தீர்ப்பா ணையின் மூலம் உறுதி செய்துள் ளது.
மேற்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாணையை கவனத்தில் கொள் ளாமல் 2020 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு உள்ளூர் அளவிலான (தேனி மாவட்டம்) குளம் சம்பந்தமான பொது ஏலம் வழக்கில் W.A.(MD) No (s) 1251 of 2020 and W.A No. 923/2020 நாள் : 3.2.2021 உள்நாட்டு கூட்டுறவு சங்கங்களின் முன்னுரி மையை குறைத்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பின் அடிப்படை யில் சென்னை மீன்வளம் மற்றும் மீன வர் நலத்துறை ஆணையர் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரிகள், குளங் களில் மீன்பாசி குத்தகையை மீனவர் கூட்டுறவு சங்கங்களின் முன்னுரி மையை தவிர்த்து பொது ஏலம் விடக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்க ளுக்கும் (ந.க.எண் : 19310/எப்4/ 2021 நாள் : 22.12.2021) ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த கடித அறிவிப்பு காரணமாக பொது ஏல நடைமுறைகள் அறிவிப்பு களாக செய்யப்பட்டது. இதனால் உள் நாட்டு மீனவர்கள் அதிர்ச்சியும், கவ லையும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீன்வளத்துறை எங்களுக்கு மீன்பாசி குத்தகை கட்ட வில்லை, அதனால் வருமானம் பாதிக் கிறது என்று கூறி நாங்கள் ஏரி குளங்களின் மீன்பாசி குத்தகையை பொது ஏலம் விடுகிறோம் என நீர்வளத் துறை அறிவிப்பு செய்து வருகிறது. இந்த அறிவிப்புகளை எதிர்த்தும் உள் நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் பல வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளன. மீன வர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற தலையீட்டின் காரண மாக இந்த பொது ஏல அறிவிப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட் டுள்ளது. தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் உள் நாட்டு மீனவர் மீன்பாசி குத்தகையில் பொது ஏல நடைமுறைக்கு எதிரான பல வழக்குகளும் கடந்த 05.01.2023 அன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வ கேட் ஜெனரல் நேரில் ஆஜராகி இந்த வழக்கு குறித்து அரசு உயர் அதிகாரி களுடன் கலந்து பேசவேண்டியுள் ளது. அதனால் அவகாசம் வேண்டும் என்று கோரினார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் உள்நாட்டு மீன வர் மீன்பிடி குத்தகைபாசி உரிமை குறித்த அனைத்து வழக்குகளும் வரும் 24.01.2023 அன்று விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. “மீன வர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பாதுகாக்கப்படும்” என்னும் தமிழக அரசு தனது கொள்கை நிலை பாட்டை, உள்நாட்டு மீனவர் குடும் பங்கள் நிம்மதி பெருமூச்சு விடும்படி நிலையான ஒரு தீர்வை ஏற்படுத்தி பொது ஏல நடைமுறைக்கு நிரந்தர மாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென உள்நாட்டு மீனவர்கள் நம்பிக் கையோடு காத்திருக்கிறார்கள்.
-ஆர்.முருகேசன்,
அந்தியூர் தாலுகா செயலாளர், சிபிஎம்.