districts

img

எட்டாக்கனியாகும் கல்வி: அதிகரிக்கும் இளம்வயது திருமணங்கள்

நாமக்கல், மார்ச் 25- நாமக்கல் அருகே அரசு அதிகாரிகளால் சாதிச்சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக் கப்படுவதால் உயர்கல்வி படிக்க முடியா மல் மலைக்குறவர் இன சிறுமிகள் இளம் வயதிலேயே திருமண பந்தத்திற்குள் தள் ளப்படும் அவலம் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலக் குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நக ரில் மலைக்குறவர் இனத்தை சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரு கின்றனர். இவர்கள் கூடை நெய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் பல்வேறு தேவைகளுக்காக சாதிச்சான்று கேட்டு,  சம்மந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரி களிடம் முறையிட்டும், மனு அளித்தும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்ற னர். ஆனால், இதுநாள் வரை அவர்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட வில்லை.  இதன்காரணமாக பொதுத்தேர்வு எழுத முடியாமலும்,  உயர் கல்வி பயிலும் முடியாத நிலைக்கும் குழந்தைகள் தள்ளப்படுகின்ற னர். இதன்காரணமாக அச்சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் பலர் இளம்  வயதிலேயே  திருமணம் செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதேபோல், அரசின் நலத்திட்டங்கள் எதுவும் பெற முடியாத நிலைக்கும் அச்சமூக மக்கள் ஆளாகியுள்ள னர். ஆகவே, தமிழக முதல்வர் தலையிட்டு தங்களுக்கு மலைவாழ் மக்களுக்கான சாதிச் சான்றிதழ், பட்டா உள்ளிட்டவை களை வழங்குவதுடன், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.