திருப்பூர், பிப்.6- சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கார்டு அடை யாள அட்டை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாது காத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட் டத்தை மாவட்டம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். சாலை யோர வியாபாரிகள் அனைவருக்கும் வியாபாரச்சான்று, ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலை யோர வியாபாரிகள் அனைவருக்கும் தொழிற்சங்க ஒத்து ழைப்புடன் வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி திருப்பூர் மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.