உடுமலை, டிச.17- வீடு இல்லாத ஏழைகளுக்குத் தேர்தல் வாக்குறுதிப்படி இல வச வீட்டு மனைபட்டா வழங்க வலியு றுத்தி குடிமங்கலம் ஒன்றிய விவசா யத் தொழிலாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி யாக வீடு இல்லாத ஏழைகளுக்கு இல வச வீட்டுமனை பட்டா மற்றும் அரசு சார்பில் வீடுகட்டி தரப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி குடிமங்கலம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத் தின் முன்பு சனிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப் பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலூக்க குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் வீடு இல்லாத ஆயிரக்கணக்கான ஏழை மக்க ளுக்கு காலியாக உள்ள அரசு நிலத் தில் பட்டா வழங்க வேண்டும்.
குறிப் பாக கொங்கல்நகரம், விருகல்பட்டி, சோமவராபட்டி, கொசவம்பாளை யம், மூங்கில்தொழுவு, அணிக்க டவு,குடிமங்கலம் உள்ளிட்ட பல ஊராட்சி பகுதிகளில் நூற்றுக்கணக் கான அரசு நிலம் உள்ள நிலையில். இதே பகுதியில் ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்கள் தங்க இடம் இல்லாமல் ஒரு சிறிய வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் மிகவும் சிரமப்பட்டு வசித்துவருகிறார்கள். மேலும் கொசவம்பாளையம் ஊராட்சியில் பல வருடங்கள் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க பல வருடங்கள் விசாரணை என்ற பெயரில் வரு வாய்த்துறையின் அலைக்கழித்து வருவதை, வட்டாட்சியர் தலையிட்டு உடனடியாக வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டது. முன்னதாக விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றிய தலைவர் வலுப்பூரான் தலைமை தாங்கிய போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் மாசாணம், ஒன்றிய செயலாளர் தம்புராஜ், கோரிக்கை உரையாக விவசாய சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றிய தலைவர் சுந்தர்ராஜ்,ஒன்றிய செய லாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினார்கள் மேலும் பொருளாளர் பழனிசாமி, மற்றும் நிர்வாகிகள் முருகன், சிவக்கு மார், ஆறுமுகம்,மணியன்,செல்வக்குமார்,ஐயப்பன், சரஸ்வதி, ஐஸ் வர்யா,திருமன் உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண் டார்கள். இதைதொடர்ந்து, உடுமலை வட் டாட்சியர் கண்ணாமணியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக் கப்பட்டது.