நாமக்கல், மார்ச் 22- அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் தொடர்பாக விளக்க ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு களை திரும்பப் பெற வேண்டும். நாட் டின் பொது சொத்துக்களை தனியா ருக்கு விற்கக்கூடாது. நூறு நாள் வேலையை 200 நாட்கள் ஆக உயர்த்தி, நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். அமைப்பு சாரா மற்றும் கட்டுமான நல வாரியங்களை சீர் குலைப்பதை கைவிட வேண்டும். எரி பொருட்கள் மீதான விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதி களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி நாமக்கல் பூங்கா சாலை முன்பு எல்பிஎப் மாவட்ட செயலாளர் கபாடி ச.பழனியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலு சாமி, மாவட்ட உதவி செயலாளர் சு.சுரேஷ், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.தனசேகரன், மாவட்ட பொருளாளர் என்.முருகராஜ், ஐஎன்டி யுசி மாவட்ட செயலாளர் கே.பழனி வேல், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் பி.பாலஜீ மாதேஸ்வரன், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணி, எல்டியுசி மாவட்ட பொதுச்செயலா ளர் எஸ்.புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
அகில இந்திய வேலை நிறுத் தத்தை ஆதரித்து ஓய்வூதியர் ஒருங்கி ணைப்புக் குழுவின் சார்பில் செவ்வா யன்று ஈரோடு டெலிபோன் பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க செயலாளர் ஜெயரா மன் தலைமை வகித்தார். வங்கி ஓய்வூ தியர் சங்கத்தின் பூவேந்திரன் முன் னிலை வகித்தார். ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள் என்.ராமசாமி, வி.பன்னீர்செல்வம் மற்றும் பி.சின் னச்சாமி, கே.நந்தகுமார் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த அரப்பாட்டத்தில் திரளா னோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்ச் 28, 29 இரு நாட்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரும் வகையில் திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக செவ்வா யன்று அனைத்து மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளானோர் பங்கேற்றனர்.
கோவை
கோவை வடவள்ளி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி எம்.ஆறு முகம் தலைமை தாங்கினார். இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டி யுசி தலைவர் வி.ஆர்.பாலசுந்தரம், ஜி. சீனிவாசன், ஏஐடியுசி சங்கத்தின் சி.தங்கவேல், எச்எம்எஸ் சங்கத்தின் டி.எஸ்.ராஜாமணி, கா.வீராசாமி, சிஐ டியு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, எல்பிஎப் பா.மணி, இளங்கோ, எம்எல்எப் மு.த.தியாக ராஜன், ஷாஜகான், ஏஐசிசிடியு தாமோ தரன், தாமஸ் லூயிஸ், எஸ்டிடியு ரகுபு, ஷாஜகான் ஆகியோர் உரையாற்றி னர். இதில், அனைத்து தொழிற்சங்கங் களைச் சேர்ந்த திரளானோர் பங் கேற்றனர்.
சேலம்
சேலம் ஐந்து ரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் செயலாளர் பொன்னி பழனியப்பன், சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், ஏஐடியுசி மாவட்ட செய லாளர் முனுசாமி, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வடமலை, ஏஐசிசிடியூ கே. நடராஜன், எச்எம்எஸ் அர்ஜுனன், ஏஏ எல்எப் நிர்வாகி முருகன் மற்றும் சிஐ டியு மாவட்ட செயலாளர் டி.உதய குமார், மாவட்டத் தலைவர் டி. பன்னீர் செல்வம், மாநில குழு உறுப்பினர் ஏ.கோவிந்தன் உள்ளிட்டு ஏராளமா னோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற னர்.