districts

img

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து,  சேலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடக்கு மாநகரக்குழு  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, நங்கவள்ளி சிபிஎம் ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று, சேலத்தில், அரசு ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து, உடுமலையில், சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சர்வமத தலைவர்கள் மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன்,  உடுமலை நகர செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 

மணிப்பூர் வன்முறையை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து சிஐடியு, விச, விதொச சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, விதொச கே.கோவிந்தசாமி மற்றும் இ.கே.முருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை கண்டுகொள்ளாமல் மௌனம் சாதிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் திருப்பூர் மாவட்டம், 63 வேலம்பாளையம் மற்றும் காமநாயக்கன்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் தலைமை வகித்தார். இதில், வேலம் பாளையம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் செந்தில், வை.பழனிசாமி, ஒன்றியச்  செயலாளர் ஆர்.பரமசிவம்,  கே.வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து, கோவை புலியகுளம் பெரியார் சிலை முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில், சிபிஎம் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் யு.கே.சிவஞானம், திமுக சந்திரன், விசிக குமணன், திக வீரமணி, சிபிஐ மணிபாரதி, மாதர் சங்க சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான ஒன்றிய மோடி அரசு பதவி விலகக்கோரி மார்க்சிஸ்ட்  கட்சியின் பெரிய நாயக்கன்பாளையம்  ஒன்றிய குழு சார்பில், நரசிம்ம நாயக்கன்பாளையத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார், ஒன்றிய செயலாளர் எம். மோகன்ராஜ் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.