நலவாரிய சர்வர் முடக்கம், கோப்புகள் அழிப்பு ஆகியவற்றை கண்டித்து சிஐடியு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக உதகையில் நலவாரியம் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத், தலைவர் எல்.சங்கரலிங்கம், பொருளாளர் நவீன் சந்திரன், சுமை பணி தொழிலாளர் சங்கச் செயலாளர் ராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.