தருமபுரி, ஜூன் 21- சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய நாடு முழுவதும் மதக்கலவரத்தை ஏற்படுத்தி வரும் சங்பரிவார் அமைப்பை கண்டித்தும், கல்வி நிறுவனங் களில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடத்துவதை அரசு தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சமூக நல்லிணக்க மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக நல்லிணக்க மேடை நிர்வாகி பொ.மு.நந்தன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.குமார், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரை ஸாமேரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய லாளர் த.ஜெயந்தி, மாவட்ட துணை செயலாளர் மின்னல் சக்தி தொகுதி செயலாளர் சக்தி, இஸ்லாமிய கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள் சாதிக்பாஷா, சுபேதார், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட செயலாளர் யாழ்திலிபன், மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜவகர்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.