உடுமலை, டிச.12- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவி டக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் உடுமலை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முன்பு செவ் வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் னர் மின்வாரிய அலுவகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை ஒன்றியத் தலைவர் ராஜகோ பால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுவதும் மின் சார வாரியத்தை தனியார் வசம் ஒப்ப டைக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்திட ஒன்றிய அரசு மாநிலங்களை வற்புறுத்தி வருகிறது. தனியாரிடம் சென்றால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக் கும், நெசவாளர்களுக்கும் தமிழக அரசு வழங்கி வரும் மின்சார சலுகைகள் பறிக் கப்படும். படிப்படியாக பிரீபெய்ட் மீட்ட ராக மாற்றப்பட்டு மின்நுகர்வோர் அந்நி றுவனங்களுக்கு முன்பணம் செலுத்தி னால் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். குடியிருப்புகளுக்கு காலை, மாலை பயன்படுத்தும் (பீக் ஹவரில்) மின்சா ரத்திற்கு கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். மின் கணக்கீட்டு பணி ஒழிக்கப்பட்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போகும். தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மூடுவிழா நடத்தவும் இத்திட்டம் வழிவ குக்கிறது.
எனவே அனைத்து தரப்பின ரையும் கடுமையாக பாதிக்கும் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரித்து மின்வாரி யத்தையும் மக்களையும் பாது காக்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் உடுமலை ஒன்றியத் தலை வர் ராஜகோபால் தலைமை ஏற்றார். விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அருள்பிரகாஷ், விவசாயிகள் சங்கத்தின் உடுமலை ஒன்றியச் செயலா ளர் பாலதண்டபாணி, குடிமங்கலம் ஒன் றியக் குழு உறுப்பினர் விஜயகுமார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடுமலை ஒன்றியச் செயலா ளர் கனகராஜ் உடபட திரளானோர் பங் கேற்றனர். தாராபுரம்: அதேபோல தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தாராபுரம் தாலூக்கா தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தலை மையில் மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலவத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.