உடுமலை, பிப். 21 - மாற்றுத் திறனாளிகளுக்கான உரி மைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு உரிய நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன் றிய அரசைக் கண்டித்து உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக செவ்வாயன்று இந்த ஆர்ப்பாட்டம் உடு மலை வட்டாட்சியர் அலுவலகம் முன் பாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட் டத்தை அமல்படுத்துவதற்கு உரிய நிதியை குறைத்தது, 100 நாள் வேலைத் திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஆகியவற்றைக் கண்டித்தும், நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி வழங்க வலியுறுத்தியும், அடிப்படை உரிமை களை நிறைவேற்றவும், உதவித் தொகையை முறையாக வழங்கவும், மாற்றுத் திறனாளர் குறை கேட்புக் கூட் டங்களை முறையாக நடத்த வலியுறுத் தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட பொருளாளர் மாலினி தலைமை தாங்கினார். கோரிக்கை களை விளக்கி மாவட்ட செயலாளர் ராஜேஷ், சிஐடியு மாவட்ட துணை செய லாளர் ஜெகதீசன் மற்றும் கமிட்டி உறுப் பினர்கள் ஆறுமுகம், வெள்ளிங்கிரி, தெய்வநாயகி, குருசாமி, சரவணன், ஜாபர், முத்துக்குமார், கோபால், அழ கிரி, பழனிசாமி, பாலசுப்பிரமணி. செல் வம், திருமூர்த்தி, மாரிமுத்து உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டார்கள்.