தருமபுரி, மே 20- மோடி அரசின் எரிபொருள் உயர்வை கண்டித்து இடதுசாரி மற் றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் மே 26,27 இல் தரும புரி மற்றும் நாமக்கல் மாவட்டம் முழுவ தும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடது சாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, ஆர்.சிசு பாலன், எஸ்.கிரைஸாமேரி, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, விடுத லைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, மாவட்ட துணை செயலாளர் ஆதித்தமிழன், முன்னாள் மாவட்ட செயலாளர் இராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட துணை செயலாளர் காசி.தமிழ்குமரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் கலைச் செல்வன் சின்னசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட்) மாவட்ட செயலாளர் கெ.கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.முருகன், மாதேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி யின் சார்பில் மாவட்டம் முழுவதும் மே 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது. முன்னதாக, மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்லில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் பிரதேசக் குழு கண்வீ னர் ந.வேலுசாமி, சிபிஐ நகர செயலா ளர்.கே.என்.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மே 26 ஆம் தேதி நாமக்கல்லில் கூட்டு இயக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், மே 27 முதல் 31 வரை ஒன்றிய, நகர, வட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பபட்டது. மேலும், வீடு, வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சா ரம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.