districts

img

மறுக்க முடியாத உரிமைகள் கேட்டு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.1- யாராலும் மறுக்க முடியாத உரி மைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி யில் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முடி வின்படி. ஒவ்வொரு ஆண்டும் அக் டோபர் முதல் தேதியை ஓய்வூதியர்  தினமாக சர்வதேச தொழிற்சங்க ஓய்வூ தியர் மற்றும் பணி ஓய்வுபெற்றோர் அமைப்பு கொண்டாடி வருகிறது. நீண்ட  கால தொழில் வாழ்க்கைக்கு பின்பு, ஒரு மரியாதையான வாழ்க்கைக்கு திரும்பு வது அனைவரின் அடிப்படையான உரிமை. ஆனால், அனைவருக்கும் மரி யாதையான வாழ்க்கை கிடைப்ப தில்லை. முறையான பென்சன், நல்ல உறைவிடம், சுகாதாரமான குடிநீர், ஆரோக்கியமான உணவு, சிறந்த மருத் துவம், தரமான பொது போக்குவரத்து ஆகியவை யாராலும் மறுக்க முடியாத உரிமையாகும். இவைகள் அனைவருக் கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி தேசிய ஓய்வூதியர்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தரு மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணி தலைமை வகித்தார். அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில இணைச்செயலாளர் கே.குப்பு சாமி, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜயன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ் ணன், எல்ஐசி ஓய்வூதியர் சங்க மாவட் டத் தலைவர் ஏ.சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று சேலம் மாவட்டம், ஜங்சன் பகுதியிலுள்ள தபால் நிலையத் தில் நடைபெற்ற ஓய்வூதியர் தின நிகழ்ச் சிக்கு தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ரா. அருள்மொழி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் டி.நேதாஜி சுபாஷ் வர வேற்றார். இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், எஸ்.தமிழ்மணி உட்பட  பலர் கலந்து கொண்டனர். முடிவில், கூட்டமைப்பின் மாவட்டப் பொருளாளர் பி.சுதாகரன் நன்றி கூறினார்.