ஈரோடு, ஜூலை 9- பவானி, லட்சுமி நகரில் மேம்பாலம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பவானி அருகே லட்சுமி நகர் உள்ளது. இப்பகுதியில் அமைக்கப் பட்டுள்ள சாலை ஒரு வழிப்பாதையைப் போல உள்ளது. இதனை அகலப்படுத்திக் கொடுக்க வேண்டும், விபத்துக்களைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு மேம்பாலம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கை கள், கடந்த சில ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரு கிறது. இந்நிலையில் திங்களன்று அப்பகுதி வியாபா ரிகள் சங்கம், ஓட்டல் நிர்வாகம், பேருந்து உரிமையா ளர் சங்கம், லாரி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் கள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை நிர்வாகங்கள் உள்ளட்டோரை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.