districts

img

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.14- நல்லம்பள்ளி அருகே அடிப்படை வசதி களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யத்திற்குபட்டது கம்மம்பட்டி ஊராட்சி. சேலம் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந் துள்ள இந்த ஊராட்சிக்குட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர், சோளியா னூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற னர். அப்பகுதியிலிருந்து, தினமும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் ஆகியோர், தருமபுரி மாவட்டத்திலிருந்து நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால், சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந் துகளை நம்பியுள்ளனர். இப்பகுதிக்கு முக் கிய சாலையாக உள்ள சோழியானூர் முதல் மலையூர்காடு செல்லும் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை, 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுக்கு முன்பு இச்சாலை உடைந்து சேதமாகி விட் டது. சாலை மிகவும் மோசமானதால், பேருந் துகள் செல்ல முடியாத தகுதியற்ற சாலை யாக மாறியதாகக்கூறி, சேலம் மாவட்டத்தில் இருந்து இயக்கபட்ட அரசு பேருந்துகளில் ஒன்றை நிறுத்திவிட்டனர். காலை, மாலை  நேரங்களில் மட்டும் பள்ளி மாணவர்களுக் காக, 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில், பொதுமக்களுக்கான பேருந்து வசதி இல்லை. இதுகுறித்து, பலமுறை மாவட்ட நிர்வா கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் முறை யிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு அதிகாரிகூட இவ்ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ள வரவில்லை. மேலும், ஊராட்சியின் சாலை முழுவதும், பழுதடைந்து பள்ளங்களாக மாறியதால், மண்ணை கொட்டி மண் சாலையாக மாற்றிவிட்டனர். காலை நேரத்தில் வரும் பேருந்துகளை தவற விட்டால், இருசக்கர அல்லது சரக்கு வாக னங்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும், மருத்துவ வசதிகள்  மற்றும் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் உள் ளிட்ட இதர வாகனங்கள் எங்கள் பகுதிக்கு மோசமான சாலையின் காரணமாக வருவ தில்லை. இதனால், ஆவேசமடைந்த அப் பகுதி பொதுமக்கள் குதிரைகாரன்மேடு கிரா மத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதி காரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பெருந் திரள் போராட்டம் நடைபெறும் என தெரி வித்துள்ளனர்.