சேலம், செப்.26- சிபிஎம் சேலம் மாவட்டக்குழு உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக குண்டர்கள் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அயோத் தியாபட்டணம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டக்குழு உறுப்பின ரான, அயோத்தியாப்பட்டணம் பகுதி யைச் சேர்ந்த கந்தசாமியை, அதிமுக கவுன்சிலர் அசோக் மற்றும் அவ ரின் ஆதவாளர்கள் அரசியல் முன் விரோதம் காரணமாக கோவில் பிரச்ச னையை ஏற்படுத்தி, கண்மூடித்தன மான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் படுகாயடைந்த கந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து பாதிக்கப் பட்ட கந்தசாமியை, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வ சிங் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இது தொடர்பாக சிபிஎம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் அதி முக கவுன்சிலர் அசோக், அவரின் தந்தை செல்வம், உறவினர்கள் பழனி யப்பன், வேலவன் ஆகியோர் ஈடுபட் டுள்ளனர். ஆனால், போலீசார் அவர் களை இதுவரை கைது செய்ய வில்லை. இதனை கண்டித்தும், உட னடியாக அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வாழப்பாடி தாலுகா செயலாளர் வி.தங்கவேல் தலைமை யில் அயோத்தியாப்பட்டணம் பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராம மூர்த்தி, எம்.குணசேகரன், ஜி.கண பதி, சேலம் மேற்கு மாநகர செயலா ளர் கனகராஜ், வடக்கு மாநகர செய லாளர் பிரவீன்குமார், பனமரத்துப் பட்டி ஒன்றியச் செயலாளர் சுரேஷ், ஆத்தூர் தாலுகாச் செயலாளர் முரு கேசன், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர் ராமசாமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.